முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர் நலனில் அக்கறை காட்டாத புதுச்சேரி அரசு..! மாணவர் கூட்டமைப்பு கண்டனம்..!

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி,புதிய கல்வி கொள்கை,சி.பி.எஸ்.இ.பாடம்,இந்தி மொழி, EWS, மதம், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் திணித்து கல்விக்கூடங்களை காவி கூடங்களாக மாற்றுவதில் காட்டும் அக்கறையை ஒரு துளி கூட மாணவர்களின் கல்வி மேம்பாடு வளர்ச்சி பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அக்கறை காட்டாமல் புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்* . *புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் கண்டனம்*" ---------------------------------------- * புதுச்சேரி மாநிலத்தில் பனிரெண்டாம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்து பல மாதங்கள் ஆகியும் கூட இதனால் வரை மாணவர்களின் சேர்க்கை முழுமை பெறவில்லை . * அரசு கலைக்கல்லூரி , சட்டம், பொறியியல் போன்ற கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு கலந்தாய்வுகளை நடத்திய சென்டாக் நிர்வாகம் தற்பொழுது மூன்றாவது கலந்தாய்வை நிறுத்தி நேரடியாக இறுதி கலந்தாய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது . * இதே போல எல்லா மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர...

லட்சுமி யானை மறைவிற்கு, கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்..!

புதுச்சேரி மணக்குள வினாயகர் யானை லட்சுமி மறைவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். மணக்குள விநாயகர் திருக்கோவிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது. மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள்.எங்களை எப்படி தேற்றிக்கொள்வதே என்று தெரியவில்லை லட்சுமி யானையை இழந்து வாடும் புதுவை மக்களுக்கும்,வெளியூரிலிருந்து வந்து அன்போடு பழகியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு வழக்கறிஞர் நியமனம்; புதுச்சேரி வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்றம் புறக்கணிப்பு..!

புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் குமரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்ததில் புதுவை மாநிலத்தை சாராத வழக்கறிஞர்களை, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவரும், வழக்கறிஞர் சங்கத்திற்கும், மாநில வழக்கறிஞர்ரகளுக்கும் தொடர்ந்து எதிராக செயல்பட்டு வரும் அரசின் சட்டத்துறை செயலாளர் மீது புதுவை அரசு உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை   பணிமாற்றம் செய்ய வேண்டும்,மேலும் வழக்குகளுக்கு உரியதீர்வு காணாமல் காலதாமதப்படுத்தி வழக்காளிகளுக்கும், வழக்கறிஞர்களின் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தின் நீதிபதியை ( Additional Motor Accident Clamis Tribunal Judge) மாற்றக் கோரியும் நாளை ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பறிக்கப்படும் மாநில உரிமைகள்; அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தல்..!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று தலைமை கழகத்தில்  செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசரியின் மலிவு விளம்பரம் மோதல் காரணமாக பறிபோன மாநில உரிமைகள் தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாகும். கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியில் பல விதத்திலும் பறிபோன மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் பறிபோன மாநில உரிமைகளை பெற்றுத்தருவது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியான பாஜகவின் கடமையாகும். ஆனால் அனைத்து விஷயங்களிலும் தொடர்ந்து மாநில உரிமைகள் பறிபோவது எதிர்கால புதுச்சேரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். மத்திய நிதி குழுவில் புதுச்சேரி மாநிலம் இதுவரை சேர்க்கப்படாதது, மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாட பிரிவுகளிலும் நம் மாநிலத்திற்கு உரிய 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படா...

ஆதிதிராவிடர் மக்கள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; சுயேச்சை எம்எல்ஏ அரசுக்கு வேண்டுகோள்..!

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ  நேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் அவர்களின் கல்வி மற்றும் சுய வேலை வாய்ப்புக்கான நிதி ஆதாரங்களை அளிக்கும் விதமாக ஆதிதிராவிடர் - பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கால் தனியார் துறையிலும், சுயதொழிலும் செய்து வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பேட்கோ மூலம் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் ஆதிதிராவிடர் மக்கள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மேம்பாட்டுக் கழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பேட்கோ மூலம் வழங்கப்பட்டு வந்த மானிய கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதிதிராவிடர் மக்கள் சுயத்தொழில் தொடங்கவும் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ...

அரசு குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகளை நேரு எம்.எல்.ஏ.ஆய்வு..!

கண்டக்டர் தோட்டம் அரசு குடியிருப்பில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு, விரைந்து பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதுச்சேரி நகர பொலிவுறு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கண்டக்டர் தோட்டம்-பிரியதர்ஷினி நகர் அரசு குடியிருப்பில் புதிய குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் அமைப்பது, புதிய தரை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு, அதிகாரிகளுடன் சென்று புணரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை மைய நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.

நெல்லித்தோப்பு தொகுதியில் உதயநிதி பிறந்தநாள் விழா

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வேல்முருகன் நகர் மக்களுக்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை, புதுச்சேரி திமுகவினர் அனைத்து தொகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வேல்முருகன் நகரில், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் அருண் ( எ) சுப்பிரமணியன் மற்றும் கிளை செயலாளர் மூர்த்தி ஆகியோர் ஏற்பாடில் மக்களுக்கு இலவச சக்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொகுதியின் பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வேலவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளார் சிவா எம்எல்ஏ கலந்து கொண்டு, மக்களுக்கு இலவச சக்கரை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெல்லித்தோப்பு தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்

சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய புதுச்சேரி அமைச்சர்..!

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் . புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சந்திர பிரியங்கா. இவர் திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு காரைக்காலுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி காவேரி பாலம் அருகே அமைச்சரின் காலம் சென்று கொண்டிருந்தது. அப்போது, அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் சந்திர பிரியங்கா உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவத்துக்கு விரைந்து சென்ற போக்குவரத்து காவலர்கள், அமைச்சர் சந்திர பிரியங்காவை பத்திரமாக மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விடுமுறை நாட்களில் பள்ளி நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு..! மாணவர் கூட்டமைப்பு கேள்வி.?

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் கூட பள்ளிகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் அரசுக்கு இருக்கிறதா?  புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் சில தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் மாணவர்களுக்கான வகுப்புகளை எடுத்து வருகின்றனர். மாணவர்களுக்கு இது மிகப்பெரிய மன உளைச்சலை உருவாக்கும். கல்வி என்ற போர்வையில் மாணவர்களை மிக மோசமான மன அழுத்தவாதிகளாக மாற்றுவதால் தான் பள்ளி கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் கூட தடுமாறக்கூடிய நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றோம். கல்வித்துறையோ, மாநில அரசோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக மாறி தொடர்ந்து சனிக்கிழமைகளில் நடத்தி வந்த வகுப்புகள் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளும் நடக்கிறது. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் படிக்கும் மாணவன் எவ்வாறு மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பான் . ...

மாணவர் பேருந்து, மடிக்கணினி,சைக்கிள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் புதிய அறிவிப்பு..

கனரா வங்கி மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விழா நடைபெற்றது கனரா வங்கி சார்பில்,கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்றது. கனரா வங்கி மேலாளர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு 117 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை ஆணையை வழங்கி சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், நாட்டிலேயே புதுச்சேரி மாநிலம் கல்வியில் 2-வது இடத்தில் உள்ளதாகவும், மத்திய அரசின் தூய்மைக்கான தேசிய விருது புதுச்சேரியை சார்ந்த 6 பள்ளிகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அதில் 5 அரசு பள்ளி என்பதில் பெருமை ஆக உள்ளது என தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில், நிதிநிலை அறிக்கையில் சுமார் ஆயிரத்து நூற்று அறுபது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சிறப்பு கவனம் செ...

அன்பழகன் தலைமையில் முதல்வரிடம் அதிமுகவினர் மனு..!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது : நம் மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வேலை வாய்ப்பில் மருத்துவர், செவிலியர், டெக்னீஷியன், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் பணி நியமனம் செய்யும் போது புதுச்சேரி மாநிலத்திற்கான தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் நம் மாநிலத்தை சேர்ந்த தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 243 எம்பிபிஎஸ் இடங்களில் 64 இடங்கள் அதாவது, 26.5 சதவீத இடங்கள் புதுச்சேரி மாநிலத்தின் இட ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. ஆனால், வேலை வாய்ப்பில் ஒரு இடம் கூட புதுச்சேரி மாநிலத்திற்கு இட ஒதுக்கீடாக வழங்கப்படுவதில்லை. புதுச்சேரியில் 8 மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பாரா மெடிகல் இன்ஸ்டிடியூட்கள் உள்ளன. மருத்துவக் துறையில் பணிபுரிய ஆயிரக்கணகான மாணவர்கள் பட்டங்கள், மற்றும் டிப்ளமோ பெற்று வேலையின்றி தவித்து வருகி...

ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

ஜிப்மர் வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அன்பழகன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..! அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும்,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி யாரின் ஆணைக்கிணங்க, புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் ஜிப்மர் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்  தலைமையில் இன்று ஜிப்மர் எதிரில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது : ஜிப்மர் வேலை வாய்ப்பு விஷயத்தில் பறிபோகும் நம் மாநில உரிமையை தடுத்து நிறுத்த புதுச்சேரி மாநில அதிமுக நடத்தும் இப்போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் முதமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் தலை சிறந...

முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஏஐடியூசி தொழிற்சங்கம் கண்டனம்..!

ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் K.சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்கும் வகையிலே நிறுவப்பட்டன என்றும், ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களின் செயல்பாட்டால் அவைகள் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு ஊழியர்களே காரணம் என குற்றம் சாட்டி கடந்த சனிக்கிழமை 19.11.2022 நடந்த கூட்டுறவு ஆண்டு விழாவில் முதலமைச்சர் அவர்கள் பேசியுள்ளார். ஆட்சி பொறுப்பில் இருந்து பொதெல்லாம் கூட்டுறவு இலாக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சர் தனது பொறுப்பை உணராமல் பேசுவது என்பது கண்டனத்துக்குறியது. பாண்லே, பாப்ஸ்கோ, பாசிக், பாண்டெக்ஸ், பாண்பேப், கான்பேட், அமுதசுரபி போன்ற பல்வேறு நிறுவனங்களில் திரு.ரங்கசாமி அவர்கள் தன்னுடைய தொகுதி சார்ந்தவர்களை உரிய தொழில் திட்டம் இல்லாமல் வேலைக்கு அமர்த்தி இந்த நிறுவனங்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தினார். அதிகாரிகளும், முதலமைசரின் உத்தரவை கேட்டு இவர் அனுப்பிய ஆட்களை எல்லாம் பணியில் அமர்த்தி அலுவலகத்தில் இடம் இல்லாமல் மரத்தடியிலும், படிக்கட்டுகளிலும் உட்காரவைத்து...

பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நரிக்குறவர் காலனியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது..!

பாஜக பட்டியல் அணி சார்பில் திருபுவனை தொகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் மாநில தலைவர் தமிழ்மாறன் கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமரின் திட்டங்களை பெறுவது பற்றியும் கலந்துரையாடினார் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பாக, திருபுவனை தொகுதியில் உள்ள நரிக்குறவர் காலணியில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ணரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,பட்டியிலன மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து நரிக்குறவர் மக்களிடையே கலந்துரையாடினார். அப்போது, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும், அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்றும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கப்படும் தவணை தொகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில தலைவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் ...

CleanHub மற்றும் Recity Network, DERMA E சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு மழை அங்கி வழங்கப்பட்டது.

CleanHub மற்றும் Recity Network, DERMA E உடன் இணைந்து, புதுச்சேரியில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு மழை அங்கி (Raincoat) வழங்கப்பட்டது. புதுச்சேரியில் மழைக்காலத்தை முன்னிட்டு, பாண்டிச்சேரி நகராட்சி மற்றும் ஸ்வச்சத்தாவில் பணிபுரியும் தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு ரைன் கோட்டுகளை கிளீன் ஹப், டெர்மா இ, மற்றும் ரீசிட்டி நெட்வொர்க் இணைந்து  புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கியது. துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேம்படுத்தும் நோக்கத்துடனும், மழைகாலங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ரைன் கோட்டுகள் வழங்கப்பட்டது. பணியிடங்களில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவை குறித்தும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வை ரெசிட்டி நெட்வொர்க் நடத்தியது. இந்த நிகழ்வில் பாண்டிச்சேரி நகராட்சி ஆணையர் எஸ்.சிவக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரைன் கோட்டுகளை வழங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் (MHO) டாக்டர். துளசிராமன், பாண்டிச்சேரி ஸ்வச்சதா கார்ப்பரேஷனின் பொது மேலாளர் மற்றும் மண்டல மேற்பார்வையாளர்க...

கூட்டுறவு நிறுவனங்களை அழித்ததே நீங்கள் தான்..!முதலமைச்சரை சாடும் அதிமுக..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla.,வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  ‘ஆடு நனைகிறதே என ஓநாய்’ பரிதாபப்பட்ட கதையாக கூட்டுறவு நிறுவனங்கள் மீது மாண்புமிகு முதலமைச்சருக்கு திடீர் கரிசனம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து, மூடு விழாவை நோக்கி சென்றதற்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள்தான் என தனது அரிய கண்டுபிடிப்பை மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  உண்மையில், மனசாட்சி இருந்தால் மாண்புமிகு முதலமைச்சர் தனது நெஞ்சில் கை வைத்து கூட்டுறவு நிறுவனங்களின் நஷ்டத்திற்கு தொழிலாளர்கள்தான் காரணம் என கூற முடியுமா? அவரின் கடந்தகால ஆட்சியில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் திணிப்பு, அதிகாரிகளின் மெத்தனம், தனது வாரிசுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர்களின் கூட்டு கொள்ளையே வீழ்ச்சிக்கு காரணம் என கூட்டு நிறுவன தொழிலாளர்களே குற்றம்சாட்டினர். லாபத்தில் இயங்கிய கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? என உண்மையை அறிந்துகொள்ள சிபிஐ விசாரணை நடத்த மாண்புமிகு முதலமைச்...

தாகூர் கல்லூரியில் நவம்பர் 26 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்..

உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம் உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், புதுச்சேரி நகராட்சி நகர வாழ்வாதார மையம், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) கீழ் 26-11-2022 (சனிக்கிழமை) அன்று புதுச்சேரி லாஸ்பேட்டை, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியும் 4 மணி வரை நடைபெற உள்ளது. நகர வாழ்வாதார மையம் சார்பில் நகர்ப்புற மற்றும் கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு பற்றிய கணக்கெடுப்பில் பல மாணவர்கள் வேலை வாய்ப்பு முகாம் நடத்த கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் உற்பத்தி தொழிற்சாலைகள், மருத்துவம், ஆடைகள், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், சுற்றுலா, நிறுவன மேலாண்மை, தொலை தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கு பெற்று வேலையற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேல...

அம்மா அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்..

அம்மா அறக்கட்டளை சார்பில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்ராயப்பேட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார் புதுச்சேரியில் அம்மா அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையிலான இலவச மருத்துவ முகாம் இன்று உப்பளம் சட்டமன்ற தொகுதி திப்ராயப்பேட்டையில் உள்ள சத்யாலயம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார். இந்த மருத்துவ முகாமில்  பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம்,கண் மருத்துவம்,தோல் சிகிச்சை பிரிவு, இதய நோய், காது, மூக்கு, பல், தொண்டை, எலும்பியல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர். மருத்துவ சிகிச்சை பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் சர...

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும்; அதிமுக வலியுறுத்தல்..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மருத்துவக்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களின் கனவுகள் ஒவ்வொரு ஆண்டும் அரசின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாகவே ஆட்சியாளர்கள் செயல்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்பதாக உறுதியளித்து மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டது. சிலரின் சுயலாப நோக்கத்தாலும், லஞ்ச லாவண்யத்தாலும் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொண்டுள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து ஒரு இடம்கூட புதுச்சேரி அரசின் ஒதுக்கீடாக பெறாதது பெரும் வெட்கக்கேடான விஷயம். இந்நிலையில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும் பிச்சையிடுவதுபோல மருத்துவக்கல்லூரி இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த ஆண்டும் குறைவான இடங்களை அ...

நாராயணசாமியால் காங்கிரஸ் கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கும்..! அதிமுக விமர்சனம்..!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :  நம் நாட்டை அதிக ஆண்டு ஆட்சி செய்த தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தேசிய அளவில் பொறுப்புகளையும், மத்தியில் இணை அமைச்சராகவும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரு நாராயணசாமி அவர்கள் ஒரே பிரச்சனையில் தேசிய அளவில் ஒரு நிலைப்பாட்டையும், மாநில அளவில் நேர் எதிரான கருத்தையும் கொண்டு காங்கிரஸ் கட்சி கொள்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.  மத்தியில் 2014 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய இணையமைச்சராக நாராயணசாமி அவர்கள் இருந்தபோது முற்படுத்தப்பட்ட பிரிவினரில் உயர்கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்களுக்கு 10 சதவீதமான இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கொண்டுவரப்பட்டது.  காங்கிரஸ் ஆட்சியால் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பிஜேபி ஆட்சியில...

உடல் உறுப்புகளை தானம் செய்த புகைப்பட நிருபர்;குவியும் பாராட்டு..!

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள புகைப்பட நிருபருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் use புதுச்சேரி நமது முரசு நாளிதழில் புகைப்பட நிருபராக பணியாற்றி வருபவர் பெருமாள். சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக புதுச்சேரி பத்திரிக்கை துறையில் புகைப்பட நிருபராக பணியாற்றி வரும் இவர், தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, அனைவருக்கும் முன்மாதிரியாக தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இவரின் செயலை பல்வேறு தரப்பினரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்த அவர், வாழும்போது முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் நாம், வாழ்க்கை முடிந்த பின்னரும் நமது உடல் மண்ணோடு மண்ணாக மக்கி போகாமல், நமது உடல் உறுப்புகள் மூலம் உயிருக்காக போராடும் சிலருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக தெரிவித்தார். விபத்துகள் மற்றும் அதனால் உடலில் உள்ள ஏதாவது ஒரு உறுப்பு சேதம் அடைந்து உயிருக்கு போராடுபவர்கள் அடிக்கடி சந்தித்து வரும் சூழ்நிலையில், சிலர் உடல் உறுப்புகள் கிடைக்காமல் உய...

தலைமை செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள்..! திமுக குற்றச்சாட்டு..!

  புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடாவுமான அனிபால் கென்னடி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சமீப காலமாக மாண்புமிகு புதுச்சேரி அரசின் முதல்வர் அவர்கள் ,எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அரசின் நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இட ஒதுக்கீடுபிரச்சினை- மின்துறை தனியார் மயம் -எம்பிசி இட ஒதுக்கீடு பிரச்சனை- உள்ளிட்ட மிக முக்கியமான மாநில நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்தவிதமான தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக் கூடாது என்று நவம்பர் 4ஆம் தேதி அன்றுமாண்புமிகு முதல்வர் அவர்களிடம் திமுக, காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட தலைமைச் செயலக அதிகாரியினை அழைத்து பேசியும் இதுவரை தீர்வு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது ஏற்றுக் கொள்ள ம...

தவறிழைத்த ஆசிரியர்களுக்கு துணை செல்வது ஆட்சியாளர்களுக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய கேடு-அதிமுக கண்டனம்..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், Ex.Mla., வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் அதிகரித்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. கட்டண கொள்ளையால் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாத ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். சமீபத்தில் முதலியார்பேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போதே கல்வித்துறை விழித்துக்கொண்டு, மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவிகளிடம் முழுமையான விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் எந்த விஷயத்தையும் மூடி மறைக்கும் வேலையை மட்டுமே புதுச்சேரி கல்வித்துறை செய்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு பள்ளியில் நடந்த பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தில், மாணவிகளிடம் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தவறாக நடக்க முயற்சிப்பதாக புகார் கூறியுள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை பள்ளி நி...

மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்; அதிமுக கோரிக்கை.!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (13-11-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 தினங்களாக விட்டு விட்டு பெய்து வரும் தொடர் மழையினால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடைபாதை வியாபாரிகள், மீனவர்கள், மீன் விற்பனை செய்யும் பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிடம் சார்ந்த தொழில் புரிவோர்கள், துப்புரவு பணியாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அன்றாடம் தொழில் புரிந்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வரும் சிறிய வியாபரிகளும் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.  தொடர் பெரு மழையால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கூறிய பிரிவுகளில் தொழில்புரிந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் குடும்பத்தாருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.5000 மழைக்கால நிவாரண உதவியாக வழங்க வேண்டும். இந்த மழைக்கால நிவாரண உதவி என்பது அன்றாட தினசரி தொழில்புரிந்து பாதிக்கப்பட்டுள்ள உண்மையான தொழிலாளர்கள்...

*ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளது, காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மிகப் பெரிய மன வருத்தத்தையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது*

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுடைய படுகொலை சம்பந்தமான வழக்கில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி சிறைவாசம் அனுபவித்தார்கள். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட திரு. பேரறிவாளன் உட்பட நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தால் திருமதி. நளினி மற்றும் 5 பேர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திய நாட்டை விஞ்ஞான நாடாக மாற்றுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மிகச் சிறப்பான முறையில் ஆட்சி நடத்திய தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாடே அவருடைய இறப்புக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலமாக தண்டிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது மறுபடியும் ஆயுள் தண்டனையாக...