முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

ஜிப்மர் வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அன்பழகன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..!


அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும்,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி யாரின் ஆணைக்கிணங்க, புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் ஜிப்மர் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்  தலைமையில் இன்று ஜிப்மர் எதிரில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது :

ஜிப்மர் வேலை வாய்ப்பு விஷயத்தில் பறிபோகும் நம் மாநில உரிமையை தடுத்து நிறுத்த புதுச்சேரி மாநில அதிமுக நடத்தும் இப்போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் முதமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் தலை சிறந்த மருத்துவமனை என்ற நிலை மாறி மெல்ல மெல்ல அழிவு பாதைக்கு ஜிப்பர் மருத்துவமனை சென்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். இந்த மருத்துவ மனையில் சாதாரண காய்ச்சலுக்கும். தலை வலிக்கும் கூட மருந்துகள் இல்லை. உயிர் காக்கும் பல மருந்துகள் வெளியில் வாங்கக் கூடிய சூழ்நிலையில் நோயாளிகள் தள்ளப்படுகின்றனர். தற்போது மருத்துவர்கள். செவிலியர்கள், டெக்னீஷியன்கள், மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு அகில இந்தி அளவில் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படுகிறது.

வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லை. நம் மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வேலை பாதிக்கப்படுகிறது. ஜிப்பர் மருத்துவ' கல்வியில் மொத்தமுள்ள 243 இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 54 இடங்கள் அதாவது 26.5 சதவீதம் புதுச்சேரி மாநிலத்திற்கு இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் ஜிப்பர் நிர்வாகம், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை.

தற்போது 433 பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுவதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில செவிலியர் படித்துள்ளவர்களுடன் நம் மாணவிகள் போட்டியிடும் நிலை ஏற்படுவதால் நம் மாநிலத்தில் செவிலியர் படிப்பு படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

மருத்துவ கல்வியில் 26.5 சதவீதம் புதுச்சேரிக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்று வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீதம் இடங்கள் வழங்கினால் நம் மாநிலம் சார்ந்த சுமார் 115 செவிலியர் படிப்பு படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.

குருப்-டி, பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களுக்குக் கூட வட மாநிலத்தை சேர்ந்தவர்களை இங்கு நியமிக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ் மொழி பேசும் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பணிக்குக் கூட வேறு மொழி பேசுபவர்களை பணியில் அமர்த்துவதால் தமிழ் பேசும் புதுச்சேரி, தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

 ஒட்டுமொத்தத்தில் புதுச்சேரி மாநிலத்தின் மாநில உரிமை ஜிப்பர் நிர்வாகத்தால் பரிக்கப்படுவதை மாண்புமிகு முதல்வர், துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்திற்கு நாம் ஏற்கனவே கொண்டு சென்றுள்ளோம்.

மீண்டும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு நம்மாநில மக்களின் நலனுக்காக கொண்டுவந்துள்ளோம். இது சம்பந்தமாக துணை நிலை ஆளுநரும், மாண்புமிகு முதலமைச்சரும்; மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி நம் மாநிலத்திற்கு ஜிப்மர் வேலை வாய்ப்பில் குறைந்தது 25 சதவீத இட ஒதுக்கீட்டை ஜிப்மரில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் பெற்று தரஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லாமல் தற்போது நடைபெறும் செவிலியர் பணி நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஜிப்மர் நிர்வாகத்தின் சீர்கேடு சரிசெய்யப்படவில்லை என்றால் ஏழை எளிய மக்களின் நலனுக்காக கழகத்தின் இடைக்காலப் பொதுச் செய்லாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் அனுமதியோடு அடுத்தக் கட்ட நடவடிக்கையை அதிமுக முன்னெடுக்கும்.

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் இதுவரை ஒருவர் கூட கல்வி பயில வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் எங்களது அதிமுக ஆட்சியில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5 சதவீதம் வரலாற்று சிறப்பு மிக்க உள்ஒதுக்கீட்டை வழங்கி இந்தியாவிற்கே எடுத்துக் காட்டாக திகழ்ந்தார்.

புதுச்சேரியிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால் 5க்கும் மேற்பட்ட அரசு பள்ளி பாணவர்கள் ஜிப்மரில் மருத்துவக் கல்வி பயிலும் சூழ்நிலை ஏற்படும். எனவே அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக தமிழக அதிமுக ஆட்சியில் மாண்புமிகு எடப்பாடியார் கொண்டு வந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை புதுச்சேரியிலும் அமுல் படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம்,மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், முன்னாள் மாநில செயலாலர், முன்னாள் எம்எல்ஏ நடராசன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவிEX.MC, கணேசன் EX. MC, திருநாவுக்கரசு. மாநில கழக துணைத் தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில MGR மன்ற செயலாளர் சிவலயா இளங்கோ,மாநில எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், விவசாய அணி செயலாளர் சக்கரவர்த்தி,மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம் ,மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு |மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், நகர கழக தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா. தொகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், பொன்னுசாமி ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், கமல் தாஸ்,குணசேகர், கிருஷ்ணன்,வேலவன், கோபால், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, பாலன், சிவராமராஜா, ராஜராஜன், வெங்கடேசன், செந்தில்முருகன், அன்பு முருகன், பூபதி, குணசேகரன்,சேகர், கமலா, நாகமுத்து, சூர்யா, மாநில மாநில எம்ஜிஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், இணைச் செயலாளர்கள் கணேசன்,,அன்பழகன். துணைச்செயலாளர் கணபதி, ,மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், பிரகாஷ், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனுவாச பெருமாள், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், துணை செயலாளர்கள் ராசு, கேசவன், யோகனந்தசாமி,மாநில மகளிரணி தலைவி மகேஸ்வரி, துணைச் செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், விவசாய அணி இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், முன்னாள் மாநில செயலாலர், முன்னாள் எம்எல்ஏ நடராசன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன் EX. MC, திருநாவுக்கரசு. மாநில கழக துணைத் தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில MGR மன்ற செயலாளர் சிவலயா இளங்கோ,மாநில எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மீனவரணி செயலாளர் ஞானவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம் ,மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு |மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், நகர கழக தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா. தொகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், குணசேகர், கிருஷ்ணன்,, கமல் தாஸ், வேலவன், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, பாலன், சிவராமராஜா, ராஜராஜன், வெங்கடேசன், செந்தில்முருகன், அன்பு முருகன், குணசேகரன்,சேகர், கமலா, நாகமுத்து, சூர்யா, மாநில மாநில எம்ஜிஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், இணைச் செயலாளர்,அன்பழகன். துணைச்செயலாளர் கணபதி, ,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பிரகாஷ், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனுவாச பெருமாள், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், துணை செயலாளர்கள் ராசு, கேசவன், யோகனந்தசாமி,மாநில மகளிரணி தலைவி மகேஸ்வரி, துணைச் செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், விவசாய அணி மாநில இணைச் செயலாளர் சிவக்குமார்,தொகுதி கழக தலைவர்கள் காந்தி, சவுரிநாதன், மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார், உட்பட கழகத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார், முன்னாள் பகுதி கழக செயலாளர் ராஜாமணி, கலியபெருமாள், பால்ராஜ்,உட்பட கழகத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...