முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விட்டத புடிக்கணும்: பாஜக தலைவர் சாமிநாதன் பேச்சு!!

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லாஸ்பேட்டை பகுதியில் நடைபெற்றது. மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி தலைவர் சோமசுந்தரம்,தொகுதி பொறுப்பாளர் தண்டபாணி ஆசிர்வாத், ரமேஷ், நமச்சிவாயம் மற்றும் தொகுதி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ,மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் பெரும்பான்மையான வார்டுகளில் பாஜக போட்டியிட வேண்டும்,பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை பொது மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சதி திட்டம் தீட்டும் திமுக: அன்பழகன் குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் திமுக சதி செய்து வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்படும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி  அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த திமுக தொடர்ந்து சதி செய்து வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக மாநில தேர்தல் ஆணையர் மீது தேவையற்ற குறைகளை திமுக கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்காத நிலையில் புதுச்சேரியில் மட்டும் இட ஒதுக்கீட்டு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கூறி திமுக தொடர்ந்து இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்த அன்பழகன்,  புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை அரசு உடனே எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  மேலும் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த கோரி மாநில ...

2 சிறுவர்களால் சோகத்தில் மூழ்கிய புதுச்சேரி!

புதுச்சேரி அருகே உள்ள பெரம்பை கிராமத்தில் போர் வாட்டர் நிறைந்த பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பெரம்பை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் -இனிதா தம்பதியினர். சுரேஷ் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு லெவின் என்கிற 4 வயது மகனும் ரோகித் என்கிற 3 வயது மகனும் உள்ளனர். இதனிடையே இன்று வீட்டின் அருகே விளையாட சென்ற இரண்டு சிறுவர்களும் நீண்ட நேரமாக காணவில்லை என தேடியபோது வீட்டுக்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் போர் போடப்பட்ட பள்ளத்தில் தேங்கி நின்ற சேற்றில் மயங்கிய நிலையில் இருந்தனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது 2 சிறுவர்களும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போர் போடப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த கிரா...