முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குடிநீர் கூட இல்லை... திமுக இளைஞர் மாநாடு தேவையா? தமிழக அரசை விளாசும் புதுச்சேரி அதிமுக.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீய சக்திகள் அரசாளும் போது இயற்கை கோரதாண்டவம் ஆடுமாம். அந்த வகையில் தமிழக விடியா திமுகவின் ஆட்சி என்பது தமிழக அரசியலில் ஒரு இருண்ட ஆட்சியாக தற்போது மாறியுள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சுமார் 90 சதவீத மக்கள் தற்போது பெய்த மழையால் தங்களது உடமைகளை இழந்துள்ளனர். வீட்டிற்குள் 5 அடி 6 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதில் செப்டிக் டேங் மற்றும் வாய்க்கால் கழிவு நீர்கள் தேங்கியதால் மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதனால் மக்கள் சொல்லனா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் எந்தவித நிவாரண உதவிகளையும், தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு மக்களுக்கு செய்யவில்லை. இந்த ஆட்சி அமைய ஏன் வாக்களித்தோம் என்ற எண்ணத்தில் சென்னை மாநகர மக்கள் கடந்த சில நாட்களாக மனவெந்து போயுள்ளனர்.  சென்னை மாநகரில் உள்ள 90 சதவீத உட்புற, நகர்புற, சுற்றுப்புற பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மழை நீரால் தேங்கி போக்குவரத்து என்பது முழுமையாக முடக்கப்பட்டுள...

புதுச்சேரியில் நாளை (07-12-2023) மின்தடை ஏற்படும் இடங்களின் விவரம்.!

புதுச்சேரி அரசு மின்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையில் சில கட்டுமான பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (07-12-2023) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்காணும் இடங்களிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்படுகிறது. காமராஜ் சாலை(பகுதி ) சித்தன்குடி (ஸ்ரீனிவாசா குடியிருப்பு மற்றும் சாணக்கியா குடியிருப்பு) வள்ளலார் சாலை(பகுதி) பிருந்தாவனம்(பகுதி )சாந்தி நகர், சாரதி நகர், இளங்கோ நகர்,நேரு நகர், எல்லையம்மன் கோவில் வீதி, ராஜீவ் காந்தி நகர் திருவள்ளுவர் சாலை(பகுதி)லெனின் வீதி (பகுதி) பெருமாள் நகர் (பகுதி) கொசப்பாளையம் (பகுதி), சாத்தானை வீதி ,சக்தி நகர் ,புது சாரம் ,பழைய சாரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.