கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் இவ்வாண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகாபாரதப் போரில் வெற்றி பெற அரவான் என்ற இளவரசனை பஞ்சபாண்டவர்கள் பலி கொடுத்த வரலாற்றை நினைவு கூரும் விதமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அரவானை கணவனாக ஏற்றுக் கொள்ளும் அடையாளமாக திருநங்கைகள் மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து, கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வரும் தாலி கட்டும் நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு, வளையல், பூமாலை அணிந்து, புதிய உடையில் மணப்பெண் அலங்காரத்தில் அரவானை கணவனாக ஏற்று தாலி கட்டிக் கொண்டு வருகின்றனர். தாலி கட்டும் நிகழ்வுக்குப் பிறகு, திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி பாடி ஆனந்தமாகக் கொண்டாடுகின்றனர். இதனைத் ...
Y Not? Media
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.