கோவிந்தா' முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த உலகப் புகழ்பெற்ற திருநங்கைகளின் புனிதத் தலமான கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மகாபாரதத்தை நினைவூட்டும் திருவிழா இந்துக்களின் புராண நூலான மகாபாரதத்தில் அரவான் தெய்வத்தின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த விழா, கடந்த ஏப்ரல்.14-ம் தேதி கொடியேற்றம் மற்றும் சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று திருநங்கைகளின் தாலி கட்டும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் அரவான் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. 21 அடி உயர பிரம்மாண்ட தேர் இந்த தேரோட்டத்திற்காக கீரிமேடு கிராமத்தில் இருந்து அரவானின் புஜம், மார்பு பகுதிகளும், நத்தம் கிராமத்தில் இ...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.