முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செய்தியாளரை தரக்குறைவாக பேசிய சீமானுக்கு, சுதந்திர தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ராஜகோபால் பழனி சுவாமி,  கவர்னர், முதல்வர், தலைமை செயலர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுச்சேரி, வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், எஸ்ஐஆர் (SIR) குறித்து கேள்வியெழுப்பிய தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. ராஜீ என்பவரை மிரட்டி, தாக்குதல் தொடுத்த செயலை, சுதந்திர தொழிலாளர் சங்கம் (சு.தொ.ச) வன்மையாகக் கண்டிக்கிறது. செய்தியாளர் ராஜீ அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க திறனின்றி, திரு. சீமான் அவர்கள், "நீ எந்த தொலைக்காட்சி? உன்னையெல்லாம் எவன் கேள்வி கேட்கச் சொன்னது? உனக்கெல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது?" என்று தரக்குறைவான, ஒருமையில் வார்த்தைகளால் திட்டி, கேள்வி கேட்கக்கூடாது என்று மிரட்டி இருப்பது ஜனநாயகத்தின் மீது அவருக்குள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. அத்துடன், தன்னுடன் வந்திருந்த தனது கூட்டத்தினரை ஏவிவிட்டு, செய்தியாளர் திரு. ராஜீ அவர்களை நெட்டித் தள்ளி தாக்கச்...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

தலைமை செயலாளரிடம் விசிக புகார்

தலித் மாணவர் வன்கொடுமை விவகாரத்தில் IGMC & RI இயக்குனர் உதயசங்கர் மீது வழக்கு பதிவு செய்ய தலைமைச் செயலாளரிடம் விசிக வலியுறுத்தல்! இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (B.Sc Nursing) செவிலியர் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் சஞ்சய் மற்றும் பிற தலித் மாணவர்கள் பாகுபாடு மற்றும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கி படிக்கும் தலித் மாணவர்களின் உடை மற்றும் உணவு குறித்து இழிவுபடுத்தி பேசிய IGMC &RI இயக்குனர் உதயசங்கர் மற்றும் பேராசிரியர்கள் வசந்தி, உமா, நித்யா ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட தலித் மாணவன் சஞ்சய் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் PCR செல்லில் புகார் அளித்துள்ளார்.இருப்பினும் வன்கொடுமையில் ஈடுபட்ட இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் PCR செல் காவல்துறையினர் காலம் கடத்தி வருகின்றனர்.தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை திருத்த சட்டம் 2015 படி ( POA ) புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டத்திற்கு விரோதமாக புகார் பெறப்பட்டு ஒரு மாத கால...

கல்வித்துறைக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க சிபிஎம் வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில செயலாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் கொள்கை மீறல்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) இன்று (11.11.2025) . இது தொடர்பாக, கட்சியின் சார்பில், மாண்புமிகு துணை நிலை ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு விரிவான கடிதத்தை அனுப்பி உள்ளோம் அது இணைப்பில் உள்ளது. கல்வித்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருந்தும், தற்போது இத்துறை 'கவனிப்பாரற்ற துறையாக' இருப்பதாக எங்கள் கட்சி கருதுகிறது.  * ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பியதற்குக் கண்டனம்: ஏற்கனவே பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும்போது, பெரும்பாலான ஆசிரியர்களை எஸ்.ஐ.ஆர் (SIR) தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க, அவர்களை உடனடியாகப் பள்ளிப் பணிக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.  * நிரந்தர இயக்குநரை நியமிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் சென்ட...

காங்கிரஸ் கட்சியினர் மீது தேர்தல் துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுச்சேரி அரசியல்வாதிகளில் மனசாட்சியே இல்லாமல் பகீர் பொய் குற்றச்சாட்டுக்களை கூறுவதில் வல்லவர் முன்னாள் முதல்வர் திரு.நாராயணசாமி ஆவார். தற்போது தனது பொய் குற்றச்சாட்டுகள் மூலம் அவரையே பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் அவர்கள் வல்லவராக முன்னேறி வருகிறார்.       இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வருகின்றது. அதன்படி ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்கள் அரசு ஊழியர்களால் (BLO) வீடு வீடாக விநியோகம் செய்யப்படுகிறது. இதுபொன்ற விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்வதில் அரசியல் கட்சிகளின் சார்பில் புத் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்கள் (BLA-1, BLA-2) கண்காணிக்கலாம். இப்பணியில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் விருப்பம் இருந்தால் வீடு வீடாக அரசு அதிகாரிகளுடன் செல்லலாம்.       காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தொகுதியான லாஸ்பேட்டையில் விண்ணப்ப படிவம் ...

எஸ்.ஐ.ஆர் ; விண்ணப்பம் வழங்கும் பணியை நீட்டிக்க அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், The 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வரவேற்று கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  அதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி  அவசியமானது என புதுச்சேரி அதிமுக சார்பில் தெரிவித்திருந்தோம். ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும், முகவரி மாறியவர்கள் பெயர்களை திருத்தம் செய்யவும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களை நீக்கம் செய்யும், பணிகளை தேர்தல் துறை துவங்கியுள்ளது. அதற்கான விண்ணப்ப படிவங்களை தேர்தல் துறையானது கடந்த 4-ம் தேதியில் இருந்து மூன்று தினங்கள் அதாவது 4,5,6 ஆகிய மூன்று நாட்களில் விண்ணப்ப படிவங்களை அரசு சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ள பூத் லெவல் ஆபீஸர்கள் அத்தனை படிவங்களையும் உரியவர்களிடம் 3 தினங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் துறை அட்டவணை வெளியிட்டுள்ளது. ...

ரெஸ்டோ பார்களால் சீரழியும் இளைஞர்கள்.! அதிமுக தமிழ் வேந்தன் குற்றச்சாட்டு

அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் தமிழ் வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் சுமார் 100-கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹோல்சேல் பார்களும் உள்ளன. அதிலும் ரெஸ்டோ பார்கள் மீது இளைஞர்கள் மிகுந்த மோகம் கொண்டுள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து வரும் இளைஞர்கள் ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு ஈடாகவே ரெஸ்ட்ரோ பார்கள் மீது மோகம் கொண்டுள்ளனர்.  ரெஸ்ட்ரோ பார்களில் மது ஒரு புறம் என்றால் கஞ்சா மறுபுறம் எளிமையாக கிடைக்கிறது.இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரே சிலர் சனிக்கிழமை இரவு நேரத்தில் ரெஸ்டோ பார்களுக்குள் சென்று மாமூல் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.  ஒருபுறம் கலாச்சார சீர்கேடு என்றாலும் மறுபுறம் ரவுடிகளின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது.ரெஸ்ட்ரோபார்களின் உரிமையாளர்களாக இருப்பவர்கள் அரசியல் பின்புலத்தில் தங்களுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர், முன்னால் மந்திரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை தெரியும் என அரசியல்வாதி பெயர்களை பயன்படுத்துகின்றன...