புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: மலிவு விளம்பர அரசியலுக்காக முதலமைச்சர் மற்றும் ஆளுநரை தரம் தாழ்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் விஷ சாராயம் அருந்தி 23-க்கும் மெற்பட்டவர்கள் மரணமடைந்த நிகழ்வுக்கு தமிழக திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க அருகதையற்றவர் ஆவார். உண்மைநிலை இவ்வாறு இருக்க முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற விதமாக புதுச்சேரி முதலமைச்சரை பற்றியும், துணைநிலை ஆளுநரை பற்றியும் திட்டமிட்டு தவறான தகவல்களை எடுத்துக்கூறி திமுவின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை காப்பாற்றும் விதத்தில் தொடர்ந்து நாராயணசாமி பேசி வருகிறார். அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட, தேர்தலில் நிர்காமல் ஓடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் வீண் விளம்பர பொய்யான அறிக்கைகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக சார்பில் அன்பான வேண்டுகோள் விடுக்கிறே...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.