முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குயிலி திரைப்படத்தின் 2வது பாடல் வெளியீடு.

புதுச்சேரியை சார்ந்த BM இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில்,இயக்குனர் முருகசாமி இயக்கத்தில் லிசி அன்டோனி, அருண் குமார் உள்ளிட்ட முன்னணி திரை கலைஞர்கள் நடித்துள்ள குயிலி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜோ ஸ்மித் இசையில், பாடலாசிரியர் சினேகன் வரிகளில் உருவான" நா பத்து மாசம்" என்ற பாடலை பிரபல திரைப்பட பாடகி வைக்கோம் விஜயலட்சுமி பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் Zee Music South என்ற youtube தளம் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி சுமார் 15 லட்சம் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. https://bit.ly/3Hq0bD2 தற்போது வேட்டவலம் ராமமூர்த்தி வரிகளில், பிரபல திரைப்பட பாடகர் அந்தோணி தாசன் பாடிய "மது அது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு" என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரன் குயிலி பட குழுவை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குயிலி திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும், திரைப்படம் வ...

வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆப்ரேஷன் சிந்துார் வெற்றி ஊர்வலம்

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆப்ரேஷன் சிந்துார் வெற்றி ஊர்வலம் நாளை நடைப்பெற உள்ளது புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது.வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு சீனுவாசன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற, சிவசங்கரன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'இந்திய ராணுவ வீரர்கள் வீரத்தை போற்றும் வகையில் நாளை 29ம் தேதி ஆப்ரேஷன் சிந்துார் வெற்றி கொண்டாடப்படுகிறது. அதற்காக நாளை மாலை 3:00 மணியளவில் வணிகர்கள் கூட்டமைப்பில் உள்ள 100 சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் வீர வணக்க ஊர்வம் நடக்கிறது. இந்த ஊர்வலம் ஏ.எப்.டி., மைதானத்தில் துவங்கி மிஷன் வீதி வழியாக சென்று மாதா கோவில் அருகில் முடிவடைகிறது.கூட்டமைப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' என்றார்.

முதலமைச்சர் ரங்கசாமிக்கு, முற்போக்கு மாணவர் கழகம் கண்டனம்.!

விசிக முற்போக்கு மாணவர் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் தமிழ்வாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் கறவை மாடு வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டலாம் என்று பரிந்துரைத்துள்ளார். முதல்வரின் இத்தகைய அறிவிப்பு புதுச்சேரியின் கல்வி கட்டமைப்பு மீது ஒன்றிய பாஜக அரசு நடத்தும் தாக்குதல்களை மூடி மறைக்கும் வேலையாகும்.உயர்கல்வியில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நுழைவு தேர்வு கட்டாயம் என்ற நிலையை ஒன்றிய பாஜக அரசு திணித்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை என்பது மூன்று ,ஐந்து,எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு என்று தொடர்ச்சியாக மாணவர்களுக்கும் பொதுத்தேர்வை திணிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் இருந்து பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தலித் ,பழங்குடியின சமூகங்களை சார்ந்த மாணவர்களை நுழைய விடாமலும் நுழைந்தவர்களை வடிகட்ட துடிக்கும் பாஜகவின் சதி திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் மு...

கிராம அலுவலர் பணி: மாணவர் கூட்டமைப்பு புகார்

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த தங்களின் துறை சார்ந்த பணி நியமனங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். அதேவேளையில், அரசு பணி என்பது கனவாகிப் போன புதுச்சேரி மாநிலத்தில் தாங்கள் எடுக்கும் முயற்சி வேலைவாய்ப்பில்லாத அனைத்து இளைஞர்களுக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம் தாங்கள் அறிவித்துள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மற்றும் அறிவிக்க உள்ள துணை தாசில்தார் உள்ளிட்ட பணி நியமனங்கள் தொடர்பாக பணியிடங்களுக்கான நியமன விதிகளில் மாற்றங்கள் செய்து கடந்த 13-12-2024 ஆம் தேதி தங்களது துறையால் வரைவு பணி நியமன விதிகள் வரைவு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குள் ஆட்சேபனைகள்/கருத்துக்கள் கோரப்பட்டிருந்தது. அரசுப் பணியை இலக்காகக் கொண்ட இளைஞர்கள் வெளியிடப்பட்ட வரைவு நியமன விதிகளில் குறிப்பிடப்பட்ட தகுதிகளுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து வந்தனர்  ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தற்போது வரை வரைவு நிய...

முதலமைச்சர் ரங்கசாமியின் பேச்சுக்கு,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்

  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் கௌசிகன் மற்றும் செயலாளர் சஞ்சய் சேகரன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,   புதுச்சேரி மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிறப்பிட வேண்டும், மூடப்பட்ட பஞ்சாலைகள், சக்கரை ஆலைகளை புனரமைத்து மீண்டும் இயக்கிட வேண்டும் மேலும் புதிய ஐடி, ஜவுளி பூங்காக்களை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல இளைஞர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவற்றை பற்றியெல்லாம் சற்றும் கவனம் கொள்ளாமல் சொற்ப அரசு காலிப்பணியிடங்களை மட்டும் நிரப்பிவிட்டு சாதனை புரிந்துவிட்டதாக 2024ம் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பொய்களை மக்கள் புறந்தள்ளி என்.ஆர் - பாஜக கூட்டணிக்கு படுதோல்வியை பரிசாக அளித்தனர். மேலும் என்.ஆர் - பாஜக கூட்டணியின் தேர்தல் கால வாக்குறுதியான ஆண்டுக்கு 50000 பேருக்கு வேலைவாய்ப்புகள் என்பது மாபெரும் பொய்பிரச்சாரம் என்பதை இளைஞர்கள...

ஒப்பந்த அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம்: மாணவர் கூட்டமைப்பு கண்டனம்

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி"என்பார்கள், இப் பழமொழிக்கேற்ப புதுச்சேரி மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு நீக்கப்பட்ட ஊழியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்து தர கோரி புதுச்சேரி முதல்வரை அணுகினால் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிரந்தரம் செய்ய நீதிமன்ற தீர்ப்பு எதிராக உள்ளது, அதனால் தலைமைச் செயலரும் ஆளுநரும் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறுகின்றார். அதே நேரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி பணி நியமனத்தை ஒப்பந்த அடிப்படையில் எடுப்பது ஏன்? என்ற கேள்வியை எமது அமைப்பின் சார்பில் முன்வைக்கிறோம். முறையான தேர்வு, இட ஒதுக்கீடு முறை அனைத்தும் பின்பற்றப்பட்டு எடுக்கப்படும் இத்தகைய ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் தவறு என பலமுறை நீதிமன்றம் எச்சரித்தும் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் புதுச்சேரி மாநிலத்தில் பணி நிரப்புவது சரியா?  ஒப்பந்த அடிப்படைய...