முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்; நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

புதுச்சேரி பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கழிப்பறையில் விஷ வாயுக்கள் கசிவு மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய தலைமைச் செயலரின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவினர் ரூர்க்கி இந்திய தொழில் நுட்பக் கழக சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ.ஏ. காஸ்மி, நீரி (NEERI) அறிவியல் அறிஞர் முனைவர் சிவக்குமார், சிறப்பு அழைப்பாளர் புதுச்சேரி பொறியியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சரவணன் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் பிரவின் சிங் சரண் ஆகியோர் 22-06-2024 அன்று காலை கனகனேரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் புதுநகர் பகுதியையும் மேலும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ள சில பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கனகனேரி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் முறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அங்கே கழிவுநீர் மாதிரி எப்படி சேகரிக்கப்படுகிறது, எந்தெந்த சோதனைகள் செய்யப்படுகின்றன அவை முறையாக செய்யப்பட்டு வெளியேற்றப்பட...

புதுச்சேரியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்களின் விவரம்

புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி இ.சி.ஆர் மின் பாதையில் பராமரிப்பு மேற்கொள்ள இருப்பதால் நாளை (10-06-2024) கீழ்க்கண்ட இடங்களில் பகல் 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்; மகாலட்சுமி ஐயர் நகர்,வி.பி சிங் நகர்,கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம் ஒரு பகுதி, மீனட்சிபெட் ஒரு பகுதி, வீமன் நகர் ஒரு பகுதி, அமிர்தா நகர், திலாசுபேட்டை, ஞானதியாகு நகர்,தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ஒரு பகுதி, கவுண்டன்பாளையம், காந்தி நகர் ஒரு பகுதி, கஸ்துாரிபாய் நகர், பேட்டையான்சத்திரம், திலகர் ஒரு பகுதி, தெற்கு இ.சி.ஆர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், வடக்கு கிருஷ்ணாநகர் சலவையாலர் நகர், சேத்திலால் நகர், மடுவுப்பேட், மேற்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர்,அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமேசானில் ஆர்டர் செய்து ரூ 1 லட்சத்தை இழந்த நபர்

அமேசானில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர்,புதிய லேப்டாப் வாங்க அமேசான் இணையதளத்தில் தேடி பார்த்து உள்ளார். அப்பொழுது ரூபாய் 1,15,000 மதிப்புள்ள லேப்டாப்பை ஆர்டர் செய்து பணத்தை அனுப்பி உள்ளார். 3 நாட்களுக்கு பிறகு அவருக்கு கொரியர் மூலம் லேப்டாப் வந்துள்ளது. அதனை பிரித்துப் பார்த்தபோது அவர் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள விலை குறைவான லேப்டாப் வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அமேசான் கஸ்டமர் கேர் மற்றும் புதுச்சேரி அமேசான் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில்,இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள எச...

செல்வகணபதி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும்; சாமிநாதன் குற்றச்சாட்டு...

புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி கிளை, தொகுதி, மாவட்ட மற்றும் மாநிலத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது. பொறுப்பேற்ற அனைவரும் திறமையாக செயல்பட்டு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் கடும் பணியாற்றி தேசிய தலைவர் சீரிய ஆதரவுடன் புதுச்சேரி மாநில சட்டசபைக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனால் கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி பங்கு பெற்றது. தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களும், முழுமையான மக்கள் நல பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள சம்பளங்கள் மற்றும் ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகை, முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. நீண்ட ன்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த வேலை வாய்ப்புகள் நேர்மையான முறைகளில் நி...

புதுச்சேரியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்களின் விவரம்

புதுச்சேரி அரசு மின்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருபுவனை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 6 வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருபுவனை, சன்னியாசிகுப்பம், திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், மதகடிப்பட்டு, நல்லூர்,குச்சிப்பாளையம்,கலித்தீர்த்தான்குப்பம்,ஆண்டியார்பாளையம், குச்சிப்பாளையம்,சிலுக்காரிப்பாளையம், திருபுவனைபாளையம் மற்றும் மதகடிப்பட்டு பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிள்ளைச்சாவடி மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 07-06-2024 காலை 10 மணி முதல் 1 மணி வரை பிள்ளைச்சாவடி,சின்ன காலாப்பட்டு,V.C குடியிருப்பு, பெரிய காலாப்பட்டு, கனக செட்டிகுளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடக்க முடியல..ஓரே ஒரு வீல் சேர் குடுங்க.. மாற்றுத்திறனாளி பெண் அரசுக்கு கோரிக்கை..!

கடந்த 4 வருடமாக ஜன்னல் வழியாகவே உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும், ஒரே ஒரு வீல் சேர் மட்டும் கொடுங்கள் என அமைச்சர் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம் பெண் அரசுக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ பலரது நெஞ்சையும் உருக்கியுள்ளது புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தேனி.ஜெயக்குமார்.இவர் மங்களம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், சமூக நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.  இவரது தொகுதிக்குட்பட்ட உறுவையார் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண் அம்பிகை(22).தந்தையை இழந்த இவர் அம்மா ஆனந்தியுடன் வசித்து வருகிறார். அம்மாவின் உதவியுடன் தனியார் கல்லூரியில் பிகாம் படித்துள்ள அம்பிகை கடந்த 4 வருடமாக வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அம்பிகை, உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் கடந்த 4 வருடங்களாக, வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாகவும், ஜன்னல் வழியாக மட்டுமே இந...

உரிய அனுமதியின்றி செயல்படும் விடுதிகளை தடை செய்ய வேண்டும் - சுயேச்சை எம்எல்ஏ நேரு வலியுறுத்தல்

புதுச்சேரி நகரப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி திறக்கப்படும் தங்கும் விடுதிகளை தடை செய்ய வேண்டும் என சுயேச்சை எம்எல்ஏ நேரு வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட, உருளையன்பேட்டை தொகுதியில் பல தெருக்களில் தீடீர்,தீடீர் என்று தங்கும் விடுதிகள் அதிகளவில் திறக்கபடுகிறது. இப்படிப்பட்ட தங்கும் விடுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி திறக்கப்படுவதால் அங்கு தங்கும் நபர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.  அதேநேரத்தில் அக்கம்பக்கம் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படி தீடீர் என்று தோன்றும் தங்கும் விடுதிகளில் வாகனம் நிறுத்தும் வசதி ஏதுமில்லாததால் விடுதிகள் இருக்கும் தெருக்களிலேயே கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த தெரு பகுதியில் குடியிருப்பவர்களும், அந்தந்த தெரு வழியை பயன்படுத்தும் வாகனஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சண்ட...