முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாதாந்திர நிவாரணம் வழங்க அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி பெரியமார்க்கெட் எனப்படும் குபேர் மார்க்கெட்டை இடித்துக்கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் பெரியமார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றித்தர வேண்டும். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று நான்கு கட்டமாக பிரித்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். *தன்னை கலந்து ஆலோசிக்காமல் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரே குற்றம்சாட்டியுள்ளார். எனவே வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ப கட்டிடத்தின் வரைபடங்களை புதிதாக மாற்ற வேண்டும்.* இந்த வரைபட தயாரிப்பின்போது பெரியமார்க்கெட் வியாபாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். வியாபாரிகளின் வசதிக்கு ஏற்ப புதிய வரைபடம் தயாரித்த பின்னர்தான் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். பெரியமார்க்கெட் கட்டுமான பணியினால் அங்கு கடை வைத்துள்ள வியபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். *அரசு திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் கட்டுமான பணிகளை முடிக்க முடியுமா? என்பது சந்தேகமாக உள்ளது. பெ...

மாணவர் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை -அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில மாணவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி அரசு செயல்பட்டு வருகிறது. காலத்தோடு நடத்தி முடிக்கப்பட வேண்டிய மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவில்லை. பல மாநிலங்களில் மருத்துவ கலந்தாய்வு முடித்து மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால் புதுச்சேரியில் நிர்வாக சீர்கேட்டால் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மத்திய அரசின் உத்தரவுப்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற சட்டம் இயற்றாமல் பேரம் பேசி அரசு ஒதுக்கீடு இடங்களை பெற காலதாமதம் ஏற்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மேதகு துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தினார். முன்கூட்டியே திட்டமிடல் இல்லாமல், அமைச்சரவை கூட்டம் நடத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கோரி கோப்பு அனுப்பப்பட்டது. இந்த கோப்பையும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முறைப்படி தயாரித்து அனுப்பாததால் பல்வேறு விளக்கங்களை மத்திய அரசு கோரியுள்ளது. இதனால் இன்றுவரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களு...

அரசு மருத்துவ கல்லூரியில் முறைகேடு -அதிமுக புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் புதுடெல்லி சிபிஐ இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுச்சேரி மாநிலம் கதிர்காமத்தில் அரசு இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் இயக்குனராக திரு.உதயசங்கர், நிதி அதிகாரியாக திரு.விஜயகுமார், மருத்துவ கண்காணிப்பாளராக திரு.ஜோசப்ராஜேஷ், நிர்வாக அதிகாரியாக திரு.முத்துலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவ கல்லூரிக்கு தேவையான மருந்துகள் முதல், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வது வரை மிகப்பெரும் முறைகேடுகள் நடந்து வருகிறது. மருத்துவ கல்லூரியில் தற்காலிக பணி நியமனம் செய்வதிலும் எந்த நியமன விதிகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. அரசு மருத்துவக்கல்லூரியில் பணி நேரத்தில் பேராசிரியர்கள், மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றுகின்றனர். இதை கண்டுகொள்ளாமல் இருக்க புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி உயரதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில் நீட் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களை சேர்க்காமல் ...

மருத்துவ கல்லூரி ஒதுக்கீட்டில் முறைகேடு-அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரி மருத்துவக்கல்லூரி இடங்களை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாக அதிமுக சார்பில் குற்றம் சாட்டி வருகிறோம். புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அனைத்தும் சுயலாப நோக்கத்திற்காக விற்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். தற்போது புதுச்சேரி மருத்துவக்கல்வி இடங்களில் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்கள் சுயலாபத்துக்காக அபகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில் என்.ஆர்.ஐ இடஒதுக்கீடாக 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவ இடத்துக்கு சுமார் ரூ.ஒரு கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியின் வளர்ச்சிக்கும், ஊழியர்களின் சம்பளத்திற்கும், கல்வி நிறுவன மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும். இந்த என்.ஆர்.ஐ இடஒதுக்கீட்டில் இருந்து பிரான்ஸ்நாட்டில் வசிப்பவர்களுக்கான உள் ஒதுக்கீடாக 2 இடங்களை வழங்க முடிவெடுத்துள்ளனர். மருத்துவக்...