முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுபானத்திற்கு அரசு சார்பில் தனி கார்ப்பரேஷன் அமைக்க அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் ஆட்சி செய்யும் எந்த அரசாக இருந்தாலும் மதுபான கொள்கையில் தள்ளாட்டத்துடன் இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த போதுமான வருவாய் தேவை என்ற நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மதுபான கொள்கையில் சரியான நடவடிக்கையை அரசு எடுத்தால் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு சிலருடைய நன்மைக்காகவும் ஒருசிலர் அரசியல் கட்சியில் உள்ள இந்த தொழில் புரிபோரின் நலனுக்காகவும் திட்டமிட்டு அரசு அரசுக்கு வரவேண்டிய வருவாயை தொடர்ந்து இழந்து வருகிறது. புதுச்செரியில் 8-க்கும் மேற்பட்ட டிஸ்ரிகள் உள்ளன. அங்கு உற்பத்தி செய்யும் சரக்குகள், வெளிமாநிலங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பிராண்டு சரக்குகளை அரசே கொள்முதல் செய்து, அதற்காக தனி கார்பரேஷன் அமைத்து சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்தால் 1000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும். 1989-ம் ஆ...

முதல்வர் ரங்கசாமியால் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் செயல்பாட்டுக்கு வராத வளர் கலைக்கூடம்.!

புதுச்சேரி ஓவியர்களின் பல ஆண்டு கோரிக்கையான வளர் கலைக்கூடம் முதல்வர் ரங்கசாமியால் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் செயல்பாட்டுக்கு வராத அவல நிலை ஏற்பட்டுள்ளதால் கலை பண்பாட்டு துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில ஓவியர்களிடையே கோரிக்கை குரல் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் புகழ்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியர்கள் உள்ளனர். தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த கலைக்கூடம் அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வந்த நிலையில், கலை பண்பாட்டு துறை சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி நகரப்பகுதியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் அருகே வளர் கலைக்கூடம் அமைக்கப்பட்டு அதனை முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம்,துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திறப்பு விழாவையொட்டி, முதல் கண்காட்சியாக, மறைந்த புதுவை மாநில ஓவியர்களை கௌரவிக்கும் வகையில், சுதந்திரத்திற்கு முன் வரையப்பட்ட அவர்களது ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து கலை...

முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா? நாராயணசாமிக்கு அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 25 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியிலும், மாநிலத்திலும் மத்திய இணையமைச்சராகவும், மாநில முதலமைச்சராகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும், கொலோச்சிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தற்பொழுது எந்த பதவியிலும் இல்லாததால் விரக்தியின் விளிம்பில் செய்வதெரியாது முறை தவறி பேசுகிறார். எந்த இடத்திலும் தனது கையில் ஒலிபெருக்கி கிடைத்தால் மக்களுடைய நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் எங்கள் கூட்டணி அரசின் முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்களைப் பற்றி அவதூறாக முகம் சுளிக்கும் விதத்தில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.  ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்து விட்டு தோல்வி பயத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய திரு. நாராயணசாமி அவர்கள் ரங்கசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்தயுடன் எங்கள் கூட்டணி கட்சியினரை வாய்க்கு வந்தபடி வசை பாடினார். தனது கட்சியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும் தரம் தாழ்ந்து விமர்...