முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சிக்கும் பாஜக எம்எல்ஏக்கள் வீடியோ...

* பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி குற்றச்சாட்டு வைத்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது* புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருகட்சிகள் இடையே பேச்சுவார்த்தை இன்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் இன்று நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம்,  "அதிகாரிகள் சரியாக செயல்படாததன் காரணமாக பல்வேறு தொகுதிகளின் மக்கள் பணிகள் நடைபெறவில்லை. சரியாக செயல்படதாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இனி வரும் காலங்களில் கூட்டணி கட்சியினரை விமர்சிக்காமல் சட்டமன்ற கட்சித் தலைவர் மூலமாக பிரச்னைகளை தெரிவிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்களிடம் அறிவுறுத்தி உள்ளோ” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், சபாநாயகருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்பு, பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய வீடியோ ...

பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமி விலக என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்!..

* முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் போர்கொடி தூக்கிய நிலையில் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது புதுச்சேரியில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது* கடந்த சட்டமன்றத் கூட்டத்தில், முதலமைச்சர் ரங்கசாமி மீது பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் புகார் தெரிவித்தது  தேசிய ஜனநாயக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன் தனது தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைப்பெற கூடாது என முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் என குற்றஞ்சாட்டிய, சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வலியுறுத்தி சட்டமன்ற வாயிலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த, காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், அங்காளனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.கே.டி ஆறுமுகம் தலைம...

மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் திமுக! பாஜக பரபரப்பு அறிக்கை...

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் நேற்றைய தினம் எதிர்கட்சி தலைவர் சிவா MLA அவர்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு மக்களிடையே ஒரு மாயையை உருவாக்கியுள்ளார். மேலும் ரேஷன் கடை மூடுவதற்கு முக்கிய காரணம் NDA கூட்டணி அரசு என்று கூறியதை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு என்ன செய்தது என்பதை சிவா அவர்கள் மறந்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்திலும் அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்துவிட்டு இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் தான் கூட்டுறவுத்துறை, பொதுப்ணித்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன என்பது அனைவரும் அறிந்த உண்மையே. கடந்த கால ஆட்சியில் மூடுவிழா கண்ட பாப்ஸ்கோ தீபாவளி அங்காடி NDA கூட்டணி ஆட்சி அமைத்த உடனேயே தீபாவளி அங்காடி தொடங்கப்பட்டு மக்களுக்கு மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் AFT மில் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 7-வத...

ஓட்ட, ரப்பர் வாய் முந்தி வருவது ஏன்? அதிமுகவை விளாசும் திமுக அமைப்பாளர் சிவா...

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் எடுத்த முடிவின்படி இந்து முன்னணியினர் பந்த் நடத்துவதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியின் இன்றைய அரசியல் நிலைகுறித்து விவாதிப்பதற்கு மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா, இந்த ஆட்சியில் மோசமான அரசியல் ஜனநாயகம் உள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல், இந்த ஆட்சியில் முதல்வர் நியமனம் முதல் அமைச்சர், சபாநாயகர், புதுச்சேரி ராஜ்யசபா உறுப்பினர் நியமிக்கப்படுவது வரை ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் அனுமதி பெற்று ப...

முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்தன் பிறந்தநாள் விழா...

* முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தன் பிறந்தநாளையொட்டி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகி ராஜி என்கிற அழகப்பன் தலைமையில் 50 கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்* அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தன் பிறந்தநாள் விழா, என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகி கொட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜி என்கிற அழகப்பன் ஏற்பாட்டில், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக,என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ராஜி என்கிற அழகப்பன் தலைமையில், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 50கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள 100கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் பதவி விலக கோரி பாஜக, ஆதரவு எம்எல்ஏக்கள் போராட்டம்!

திருபுவனை தொகுதியில் எந்தவித பணிகளும் செய்ய விடாமல் தடுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வலியுறுத்தி, சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் சட்டமன்ற வாயிலில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அங்காளன். சுயேச்சையாக இருந்தால் தொகுதியில் வளர்ச்சி பணிகள் தடைப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு ஆதரவளித்து வருகிறார்.  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாகவும், எந்தவித நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களையும் செயல்படுத்த விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில் இன்று தனது தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சட்டமன்றத்திற்கு வந்த அங்காளன், சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ரங்கசாமி தனது தொகுதியை முழுமையாக புறக்கணிக்கிறார் என்றும், தான் பாஜகவிற்கு ஆதரவளிப்...

ஆட்சியாளர்களின் குறுக்கீட்டால் மூடு விழாவை நோக்கி அமுதசுரபி!

ராஜிவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின் படி ஆளுநர், முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி 16.03.1989-ஆம் ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் சூப்பர் மார்க்கெட்டாக மாற்றம் செய்யப்பட்டு, சந்தை விலையை விட குறைவான விலையில் மளிகை, ஜவுளி மற்றும் மின்சார சாதனங்கள் ஆகிய பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையிலும், அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துகொள்ளும் வகையில் மாத கடனில் பொருட்களை விற்பனை செய்து லாபத்தோடு சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ஆட்சியாளர்களின் தொடர் குறுக்கீட்டால் அமுதசுரபி நிறுவனத்தில் தேவைக்கு அதிகமாக பணியாட்களை நியமித்தது, தனியார் கட்டிடங்களில் மாத வாடகைக்கு தேவையற்ற இடங்களில் கடைகளை திறந்து செயல்படுத்தியது போன்ற காரணங்களால்தான் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, ஊழியர்களுக்கே ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எந்தவித பொருட்களும் இன்றி பெயரள...

சண்டே மார்க்கெட்டுக்கு தடை! நகராட்சி ஆணையர் அறிவிப்பு!

புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எதிர் வரும் ஞாயிற்று கிழமை 04.09.2022 அன்று விநாயகர் சிலை ஊர்வலம் புதுச்சேரி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியே நடைபெற உள்ளதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைப்படி ஊர்வலம் வரும் வழித்தடம் போக்குவரத்து இடைஞ்சலின்றி இருக்க மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சிக்னலில் இருந்து நேரு வீதி சந்திப்பு வரை உள்ள ஞாயிற்று கிழமை கடைகள் (சன்டே மார்க்கட்) அனைத்தும் செயல்பட கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சன்டே மார்க்கட் வியாபாரிகள் அனைவரும் அன்றைய தினம் மேல் குறிப்பிட்ட பகுதியில் கடை நடத்தாமல் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.