முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாயிண்ட் ரேஞ்ச் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.!

பாயிண்ட் ரேஞ்ச் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.! டைரக்டர் சைனு சாவக்கடனின் பாயிண்ட் ரேஞ்ச் (Point Range) படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்படப்பிடிப்பு கோழிக்கோடு, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் நடந்தது. டி எம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரின் கீழ் ஷிஜி முஹம்மது மற்றும் தியம்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பாயிண்ட் ரேஞ்ச், ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம், இத்திரைப்படத்தை சுதீர் 3டி கிராஃப்ட் இணைந்து தயாரித்துள்ளது.  இப்படத்தின் நடிகர்கள்-  சரத் அப்பானி, ரியாஸ் கான், ஹரிஷ் பெராடி, சார்மிளா, முகமது ஷாரிக், சனல் அமன், ஷபிக் ரஹிமான், ஜோய் ஜான் அந்தோணி, அருள் டி. சங்கர், ராஜேஷ் சர்மா, அரிஸ்டோ சுரேஷ், பிஜு கரில் (கவன் ராய்), பிரேம்குமார் வெஞ்சரமூட், டயானா ஹமீத், சுமி சென், ஃபெஸ்ஸி பிரஜீஷ் மற்றும் முன்னணி மலையாளம், தமிழ் மற்றும் இதர மொழி நட்சத்திரங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். மிதுன் சுப்ரான் எழுதிய கதைக்கு போனி அசனார்...

பாயிண்ட் ரேஞ்ச் படத்தின் படப்பிடிப்பு நிறைவு.! தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி மொழிகளில் வெளியிட முடிவு.!

டைரக்டர் சைனு சாவக்கடனின் பாயிண்ட் ரேஞ்ச் (Point Range) படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்படப்பிடிப்பு கோழிக்கோடு, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் நடந்தது. டி எம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரின் கீழ் ஷிஜி முஹம்மது மற்றும் தியம்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பாயிண்ட் ரேஞ்ச், ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம், இத்திரைப்படத்தை சுதீர் 3டி கிராஃப்ட் இணைந்து தயாரித்துள்ளது.  இப்படத்தின் நடிகர்கள்-  சரத் அப்பானி, ரியாஸ் கான், ஹரிஷ் பெராடி, சார்மிளா, முகமது ஷாரிக், சனல் அமன், ஷபிக் ரஹிமான், ஜோய் ஜான் அந்தோணி, அருள் டி. சங்கர், ராஜேஷ் சர்மா, அரிஸ்டோ சுரேஷ், பிஜு கரில் (கவன் ராய்), பிரேம்குமார் வெஞ்சரமூட், டயானா ஹமீத், சுமி சென், ஃபெஸ்ஸி பிரஜீஷ் மற்றும் முன்னணி மலையாளம், தமிழ் மற்றும் இதர மொழி நட்சத்திரங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். மிதுன் சுப்ரான் எழுதிய கதைக்கு போனி அசனார் திரைக்கதை எழுதியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்...

சுயவிளம்பர பந்த்தை தோல்வியடைய செய்த பொதுமக்களுக்கு ஓம்சக்தி சேகர் நன்றி.!

புதுச்சேரி அதிமுக மாநில (மேற்கு) செயலாளர் ஓம்சக்திசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டி அதனை காரணமாக கொண்டு தன்னை அரசியலில் முன்னிறுத்திக் கொள்ள சுய விளம்பரத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒரு போராட்டத்தை புதுச்சேரி மக்கள் புறந்தள்ளி மிக பெரிய தோல்வி அடைய செய்தது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகும். நான் ஏற்கனவே சொன்னது போல அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் பொது மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயக்கம் ஆகும். மாறாக ஒரு சிலரின் சுயநல அரசியல் காரணமாக கழகத்திற்கு அவ பெயரை ஏற்படுத்தும் முயற்சியை கழகத் தொண்டர்களால் தடுத்துள்ளோம். அஇஅதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் என ஒரு சிலர் அறிவித்தது முதலே இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு போராட்டத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நான் தொடர்ந்து கூறி வந்தேன். அதுபோலவே பொதுமக்கள் மத்தியிலும் கழகத் தொண்டர்கள் மத்தியிலும் உரிய வரவேற்பு கிடைக்காமல் இந்த போராட்டம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனதா ...

விடியற்காலை 5 மணிக்கு அன்பழகனை கைது செய்த போலிசார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனையை வலியுறுத்தி கழகத்தினுடைய கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் அனுமதியோடு மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் ஆளுமைக்கு கீழ் அடிமைப்பட்டு இருக்கின்றது.பிற மாநிலம் போன்று புதுச்சேரி மாநிலத்தில் எந்த அதிகாரமும் இல்லை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு பல் இல்லாத பாம்பு போன்று செயல்பட்டு வருகிறது.  மற்ற மாநிலங்கள் போன்று புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் இல்லாததால் மாநிலத்தினுடைய வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எந்த முதலமைச்சராக இருந்தாலும் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து கோப்புகளுக்கு கையெழுத்து பெறும் அடிமை நிலையே தொடர்கி...

ராகுல் பேரவை சார்பில் காங்கிரஸ் தின கொண்டாட்டம்.!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது அகில இந்திய காங்கிரஸ் கட்சி 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 138 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில்,புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் ஊடக பிரிவு சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவின் ஒரு பகுதியாக வண்ண அருவி ஓவிய கூடத்தில், மாபெரும் ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி ஊடக பிரிவு சேர்மான RE. சேகர் தலைமையில், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ...

அன்பழகன் கருத்து அதிமுக கருத்து அல்ல.! வையாபுரி மணிகண்டன் பதிலடி.!

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருமை அண்ணன் அன்பழகன் அவர்களுக்கு, எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, கண்ணின் இமைபோல தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் ரங்கசாமியை பாதுகாத்து பிரகாசமாக ஜொலிக்க வைக்கிறீர்களா? இன்று தாங்கள் வைர கிரீடம் சூட்டும் முதலமைச்சர் ரங்கசாமி 2011ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தயவால் வெற்றி பெற்ற பின், வாக்களித்த மையின் தடம் மறையும் முன்னரே புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் செய்து, தனித்து ஆட்சி அமைத்ததை மறந்து விட்டீர்களா? நீண்டகாலத்திற்கு பிறகு புதுச்சேரியில் அதிமுகவின் அமைச்சராகலாம் என தங்களுக்கு இருந்த கனவு குழிதோண்டி புதைக்கப்பட்டதையும் மறந்து விட்டீர்களா? சரி, பழங்கதையை விடுங்கள். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு கூட்டணி கட்சி தலைவரான, தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு.ரங்கசாமி வரவில்லை என்பதையும் மறந்துவிட்டீர்களா...

உள்ளாட்சித் துறை காலி பணியிடங்களை நிரப்ப அதிமுக வலியுறுத்தல்.!

  அதிமுக மாநில செயலாளர்(மேற்கு) ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் அன்றாடம் பயன்பெற கூடிய துறைகளில் உள்ளாட்சி துறை முக்கியமான ஒன்று ஆகும். வீட்டு வரி,பிறப்பு ,இறப்பு பதிவு செய்தல்,பதிவு திருமணம் போன்ற பல மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட நகராட்சி,மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் நடைபெற்று வருகின்றன.இப்படி மக்களின் அன்றாட அத்தியாவசிய துறையான உள்ளாட்சி துறையில் பல பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்ப படாமல் உள்ளதால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக பிறந்த பதிவில் பெயர் மாற்றம்,பெயர் திருத்தம் போன்ற சிறு நடவடிக்கைகள் மேற்கொள்ள குறைந்தது மூன்று மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக மாணவர்களின் மாற்று சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய பிறப்பு சான்றிதழில் ஏதேனும் சிறு திருத்தம் செய்ய பதிவாளர் அலுவலகத்தை நாடும் போது சொல்ல முடியாத துயரங்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டி உள்ளது.மேலும் தேவை இல்லாத அலைக்கழிப்பு ஏற்பட்டு மக்களிடையே ஒரு வித வெறுப்புணர்வு ஏற்பட்டு அன்றாடம் பொது மக்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் ச...

மாநில அந்தஸ்து பெற மக்களை திரட்டி போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும்; அன்பழகன்

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகியவர்கள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தோம். மறுபுறம் மக்கள் விரோத ஆட்சி நடத்திய திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் மக்கள் என்.ஆர். தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர். இந்த கூட்டணி என்பது வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் சிறந்த ஒரு நல்லாட்சியை புதுச்சேரி மாநிலத்தில் நடத்தி வருகிறது. கடந்த கால ஆட்சி போல இல்லாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு, துணைநிலை ஆளுநருடன் மோதல் போக்கின்றி ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநில அந்தஸ்து பெற வேண்டிய அவசியம் குறித்து முதலமைச்சர் அவர்கள் நிர்வாக ரீதியில் மாநில அந்தஸ்து இல்லாத சூழ்நிலையில் தனக்கு ஏற்படும்...

புதிய மதுபான தொழிற்சாலைகள் மற்றும் கடை உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்;பாஜக

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.வையாபுரி மணிகண்டன் மற்றும் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவசங்கர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து கடிதம் அளித்தனர். அதில் மதுபான கொள்கையில் புதுச்சேரி பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பாஜகவின் கொள்கை. புதுச்சேரி மாநில பாதுகவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது. புதச்சேரி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 12 பாஜக மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடும் இதுதான். புதுச்சேரி மாநில மக்களின் மனநிலையும் மதுவுக்கு எதிராகத்தான் உள்ளது. இதனால்தான் மக்கள் திரண்டு போராட்டம் நடத்துகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி...

திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுக்கு புதுச்சேரி அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: புதுச்சேரிக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பற்றி பேசிய வார்த்தைகள் அனாகரிகமான அறுவறுக்கத்தக்க செயலாகும். எந்த ஒரு மாநில முதலமைச்சரும் பிற மாநிலத்திற்கு செல்லும் போது அந்த மாநில முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தது ஸ்டாலினின் தகுதிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம், பதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம். இந்த மாநிலத்தின் துணைநிலை ஆளுநருடன் இணக்கமாக செயல்படுவது மாநில வளர்ச்சிக்கு உகந்ததாகும். அந்த வகையில் முதுலமைச்சர் மத்திய அரசிடமும், துணைநிலை அளுநரிடமும் இணக்கமாக செயல்படுகிறார். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தி ஒரு நல்லாட்சி நடத்தி வருகிறார். ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் தகுதியில் துணைநிலை ஆளுநரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார். எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என தமிழக முதுலமைச்சர் பேசியது...

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய முதலமைச்சர் ரங்கசாமி..!

போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் ரங்கசாமியின் கார் பல மணி நேரம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடந்த மகா தீபத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று திருவண்ணாமலை சென்றார். அங்கு தீப விழாவில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரிக்கு திரும்பி கொண்டு இருந்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முதல்வர் ரங்கசாமி கார் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் முதல்வரின் கார் சிக்கிக் கொண்டது. பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி முதல்வர் ரங்கசாமி தவித்தார். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தி முதல்வரின் காருக்கு வழி விட்டனர். பின்னர் அங்கிருந்து முதல்வரின் காரில் புறப்பட்டு சென்றது.

கவர்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்; திமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான சிவா விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசு பேச்சுரிமை, கருத்துரிமையை நசுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு விழா ஒன்றில் பேசும்போது கவர்னரை மிக மோசமாக விமர்சனம் செய்கின்றீர்கள். அவ்வாறு விமர்சித்தால் இனி விமர்சிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கைகள் இருக்கும் என்று மிரட்டியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். அரசியல் கட்சி தலைவர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். மக்களை சந்தித்து அதிகாரத்திற்கு வருபவர்களுக்கு அந்த பக்குவம் இருக்கும். அவ்வாறு வராதவர்களுக்கு அந்த பக்குவம் இருக்காது என்பதை கவர்னர் தனது பேச்சு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதுபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அந்தப்பக்குவம் இருக்கும் என்பதையும் அவரே அந்த விழா பேச்சில் தெரிவித்துள்ளார். அதாவது பிரதமர் மோடியிடம் சுறு, சுறுப்புக்கான காரணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு விமர்சனங்களை சாப்பிடுவதால்தான் நான் சுறு, சுறுப்பாக இருப்பதாக அவர...

மீனவ சமுதாய மக்களுக்கு ஈமச்சடங்கு திட்டத்தை துவங்க வேண்டும்; அதிமுக கோரிக்கை..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், Ex.Mla., வெளியிட்டுள்ள அறிக்கையில், தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்ற புரட்சித்தலைவரின் பாடல்போல புதுச்சேரி மாநில மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கண்ணீரில்தான் கடக்கிறது.மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான எந்தவித தொலைநோக்கு திட்டங்களையும் ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு செய்யவில்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணம், முதியோர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட ஒவ்வொரு உரிமைகளையும் நீண்ட நெடும் போராட்டத்துக்கு பிறகுதான் பெற வேண்டிய கட்டாயத்திற்கு மீனவ சமுதாய மக்கள் ஆளாக்கப்படுகின்றனர். இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிச்சூடு, மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், இயற்கை சீற்றங்கள், இயற்கை பேரிடர்கள் என உயிரை பணயம் வைத்து மீனவ சமுதாயத்தினர் தொழில் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட மீனவ சமுதாய மக்களை ஆளும் அரசு புறக்கணிப்பது சரியான அணுகுமுறை அல்ல. பிற சமூகத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மீனவ சமுதாய மக்களுக்கு அளிக்கப்படாதது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அரசின் புற...

இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன.!பாமக கேள்வி.?

புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை ஆளுகின்ற என் ஆர் - பாஜக அரசு புதுவையில் காவல்துறை, புள்ளிவிவரத்துறை, தீயணைப்புத்துறை இப்படி பல அரசு பதவிகள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மறுத்த நிலையில், அதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மிகப்பெரும் போராட்டம் புதுவையில் அண்மையில் நடந்தது.  இதற்குப் பிறகு புதுவையின் முதல்வர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் கலந்து ஆலோசித்து விரைவில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் 15 நாட்களாகியும் எந்த முடிவு எட்டப்படவில்லை. வேலைவாய்ப்பு தேர்வு செய்திகளும் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதுவை அரசு உடனடியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள 11 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் .இது தவறும் பட்சத்தில் பாமக தலைமையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பயன்படும் வன்னியர், மீனவர், மருத்துவர், வண்ணார், குயவர்,இருளர், ஓட்டர், மருதநாயுடு நூக்கர், மித்ரா (யானம்) எழுத்தாக்கர...