முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுயவிளம்பர பந்த்தை தோல்வியடைய செய்த பொதுமக்களுக்கு ஓம்சக்தி சேகர் நன்றி.!

புதுச்சேரி அதிமுக மாநில (மேற்கு) செயலாளர் ஓம்சக்திசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டி அதனை காரணமாக கொண்டு தன்னை அரசியலில் முன்னிறுத்திக் கொள்ள சுய விளம்பரத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒரு போராட்டத்தை புதுச்சேரி மக்கள் புறந்தள்ளி மிக பெரிய தோல்வி அடைய செய்தது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகும். நான் ஏற்கனவே சொன்னது போல அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் பொது மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயக்கம் ஆகும். மாறாக ஒரு சிலரின் சுயநல அரசியல் காரணமாக கழகத்திற்கு அவ பெயரை ஏற்படுத்தும் முயற்சியை கழகத் தொண்டர்களால் தடுத்துள்ளோம். அஇஅதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் என ஒரு சிலர் அறிவித்தது முதலே இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு போராட்டத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நான் தொடர்ந்து கூறி வந்தேன். அதுபோலவே பொதுமக்கள் மத்தியிலும் கழகத் தொண்டர்கள் மத்தியிலும் உரிய வரவேற்பு கிடைக்காமல் இந்த போராட்டம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனதா கூட்டணியை மறைமுகமாக உடைக்க முயற்சி செய்த அரசியல் தில்லு முல்லு வியாபாரி எடப்பாடி அணி சூழ்ச்சி தகர்த்தெறியப்பட்டுள்ளது. மக்கள் நலனை புறந்தள்ளி சுய விளம்பர அரசியல் செய்யும் யாவருக்கும் இந்த முழு அறிவிப்பு போராட்டத் தோல்வி ஒரு மிகப்பெரிய பாடமாகும்.இந்த முழு அடைப்பு போராட்டம் தோல்வியடைய காரணமான காவல்துறையினருக்கும் மற்ற வியாபார பெருமக்களுக்கும் புதுச்சேரி மாநில அஇஅதிமுக சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...