முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதல்வர் ரங்கசாமி மீது சிபிஐ விசாரணை கோரும் அதிமுக.!

புதுச்சேரி மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் தொடர்கிறது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களுக்கு ஆதரவாக புதுச்சேரி முதலமைச்சரும், அவரின் உத்தரவின்பேரில் சென்டாக் நிர்வாகத்தில் பல ஆண்டாக தொடர்ந்து பணியாற்றி வரும் அதிகாரிகளும் செயல்படுகின்றனர். இதற்கு சாட்சியாக சென்டாக் அலுவலகம் எதிரே தனியார் கல்லூரி நிர்வாகியுடன், சென்டாக்கின் மூத்த அதிகாரி காரில் அமர்ந்து பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைப்போல பல்வேறு குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2 முறை புதுடில்லி சிபிஐ இயக்குனருக்கு ஆதாரங்களுடன் புகாரும் அனுப்பியுள்ளோம். முதலமைச்சர் அண்ணனை காப்பாற்றும் வகையில் பாசமலரான தங்கை மேதகு துணை நிலை ஆளுநர் தமிழிசை, அதிமுகவின் புகாரை தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறார். புதுச்சேரியில் மாணவர்கள் நலனுக்காகவே அரசு செயல்படுகிறது என்றும் எந்த ஊழலும்...

நவராத்திரி விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்ய பொருட்கள் வழங்கிய பாஜக மாநில நிர்வாக பிராபாதேவி.!

பாவணர் நகர் ஸ்ரீ ஜலகண்ட முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக பொருளாதார பிரிவு மாநில அமைப்பாளர் பிரபாதேவி வீரராகு,100கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை உட்பட மாங்கல்ய பொருட்களை வழங்கினார். புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதர பிரிவு மாநில அமைப்பாளர் பிரபாதேவி வீரராகு, புதுச்சேரி மாநிலம் முழுவதும் மகளிரை ஊக்கப்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது,ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கு நிதி அளிப்பது, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது என தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னலமின்றி சேவை செய்து வருகிறார். இதனிடையே உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பாவணர் நகர் ஸ்ரீ ஜலகண்ட முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு கோவில் அறங்காவல் குழு சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் விழாவில் கலந்து கொண்ட 100கும்‌ மேற்பட்ட சுமங்கலி பெண்களுக்கு...

புதுச்சேரியில் 2024-ல் 2 தேர்தல் வர வாய்ப்பு; முதல்வர் ரங்கசாமி விழிப்புடன் இருக்க அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழரை சதவீதம் உள்ஒதுக்கீடு போன்று புதுச்சேரியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10% உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான அனுமதியை மத்திய அரசு காலத்தோடு வழங்காததால் குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கவில்லை. மேலும் புதுச்சேரி அரசும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு 10 தரவரிசைக்கான கலாந்தாய்வை அறிவித்து சென்டாக் கலந்தாய்வு மூலம் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை முடிவு செய்யப்பட்டது இந்நிலையில் சென்டாக் கலந்தாய்வு குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் முதலமைச்சர் அவர்கள் சென்டாக் கவுன்சிலுக்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டும் என கேட்டு மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார். செப்டம்பர் 30-ம் தேதிக்கு பிறகு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் கடந்த முறை போல் காலம் கடந்...

மாணவர்களிடம் முதல்வர் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்- அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கல்விக்கண் திறந்த காமராஜர் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என கூறிக்கொள்ளும் முதலமைச்சர் தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து புதுச்சேரி மாநில மாணவர்களை சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. புதுச்சேரியை கல்வி கேந்திரமாக மாற்றி வருகிறோம் என வீண் தம்பட்டம் அடிப்பதில் மட்டும்தான் முதலமைச்சர் கவனம் செலுத்துகிறார். எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவ செல்வங்கள் கல்வி தொடர்பான எல்லா விஷயங்களிலும் அலைக்கழிக்கப்பட்டு, பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவ கல்லுõரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு காலக்கொடு நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ஏற்று இந்திய மருந்துவ கலந்தாய்வு மையம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்றங்களின் உத்தரவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் எப்போதும்...

சுற்றுலா பயணிகளின் வருகைக்காக, புதுச்சேரி மண்ணின் மைந்தர்களை வீட்டில் முடக்குவது நியாயம்தானா? அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் எந்த கனிமவளமும் இல்லை. மாநிலத்தின் வருவாய் பெருமளவு சுற்றுலாவை நம்பியே உள்ளது. சுற்றுலா வருமானத்தை தவிர்த்து புதுச்சேரி மாநில வருவாயை பெருக்க தொழிற்சாலைகள், சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களை திறக்க எந்த அடிப்படை பணிகளையும் செய்யவில்லை.கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சர் வெற்று விளம்பர அரசியல் செய்து வருகிறார். இதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரவேண்டும், அதன்மூலம் மாநிலத்தின் வருவாய் பெருக வேண்டும். இத்துடன் மற்ற துறைகளிலும் அரசு வருவாய் ஈட்ட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. இதற்காக முதலமைச்சரும், அமைச்சர்களும், அரசுத்துறை அதிகாரிகளும் இதுவரை மேற்கொண்டுள்ள அடிப்படை நடவடிக்கைகள் என்ன? எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருக்கும்போதே, தற்போது ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு என்ன வசதிகளை புதுச்சேரி அரசு செய்து தந்துள்ளது...