முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுச்சேரியில் 2024-ல் 2 தேர்தல் வர வாய்ப்பு; முதல்வர் ரங்கசாமி விழிப்புடன் இருக்க அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழரை சதவீதம் உள்ஒதுக்கீடு போன்று புதுச்சேரியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10% உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான அனுமதியை மத்திய அரசு காலத்தோடு வழங்காததால் குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கவில்லை. மேலும் புதுச்சேரி அரசும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு 10 தரவரிசைக்கான கலாந்தாய்வை அறிவித்து சென்டாக் கலந்தாய்வு மூலம் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை முடிவு செய்யப்பட்டது இந்நிலையில் சென்டாக் கலந்தாய்வு குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் முதலமைச்சர் அவர்கள் சென்டாக் கவுன்சிலுக்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டும் என கேட்டு மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார். செப்டம்பர் 30-ம் தேதிக்கு பிறகு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் கடந்த முறை போல் காலம் கடந்த மாணவர் சேர்க்கையை மருத்துவ கவுன்சில் அங்கீகரிப்பதில் ஏற்பட்ட பாதிப்பை போன்று தற்போதும் பாதிப்பு ஏற்படுமா என்ற குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் டெல்லி சென்று.இதற்கான அனுமதியை அனுமதியை பெற்று வர வேண்டும். அனைத்து விஷயங்களிலும் அவசரம் காட்டும் தலைமை செயலாளர் இந்த. விவகாரத்தில் ஏன் மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதவில்லை ஏற்கனவே ஒரு முறை மத்திய மருத்துவ கவுன்சில் அறிவித்த அட்டவணைக்குள் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தாததால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் நீதிமன்றம் சென்றனர். இதே போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சரும், துணைநிலை ஆளுநரும் நேரடியாக டெல்லி சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அமைச்சர் சந்திர பிரியங்கா விவகாரத்தில் அதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒரு அமைச்சரை நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் முதலமைச்சருக்கு உரிமை உண்டு. ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஜனாதிபதியின் அனுமதியும் தேவையில்லை.

ஒரு அமைச்சரை நீக்க அனுமதி வழங்குவதற்கு முதலமைச்சரும், துணைநிலை ஆளுநருமே போதும்.

கடந்த காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த திரு கண்ணன் அவர்களை அப்போதைய முதல்வர் நீக்கம் செய்து அதற்கு அப்போதைய துணை ஆளுநர் உடனடியாக அரை மணி நேரத்தில் அனுமதி வழங்கினார்.

ஒருவேலை மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒரே கடிதத்தில் அமைச்சர் நீக்கம் செய்தும், அதே கடிதத்தில் புதிய அமைச்சர் சேர்த்தல் சம்பந்தமாக கடிதம் வழங்கியிருந்தால், அக்கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு துணைநிலை ஆளுநர் அனுப்பி இருப்பார் என நினைக்கிறேன். அவ்வாறு ஒரே கடிதத்தில் நீக்குதலும், சேர்த்தலும் குறிப்பிட்டிருந்து அக்கடிதத்தை துணைநிலை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியிருக்க கூடாது. அதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து, நீக்குதலும், சேர்த்தலும் தனி தனி கடிதமாக வழங்க முதலமைச்சரிடம் துணைநிலை ஆளுநர் தெரிவித்திருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் அமைச்சர் நீக்கம் சம்பந்தமாக 15 நாட்களாகியும் குழப்பம் நீடிப்பதால், அமைச்சர் நீக்கம் என அரசிதழில் வெளியிடப்படாமல் இன்னமும் என்.ஆர் கூட்டணி அரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டே திட்டமிட்டு பாஜக இதில் நாடகம் ஆடுவதாக தெரிகிறது.

கூட்டணியில் இருந்து கொண்டே அமைச்சர் நீக்கம் விவகாரத்தில் பாஜகவினர் முதலமைச்சருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.

முதலமைச்சரின் இந்த முடிவுக்கு பாஜக எப்பொழுதும் துணை இருக்க வேண்டும். ஆனால் நீக்கம் செய்யப்பட்ட சந்தர்ப்பியங்காவிற்கு பாஜகவில் உள்ள ஒரு சிலர், அதாவது மத்திய அமைச்சராக உள்ளவரும், மாநில பாஜக அமைச்சராக உள்ள ஒருவரும் சந்திரபிரியங்காவின் அமைச்சர் பதவி நீக்கத்தை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செய்து வருகின்றன. இது நிச்சயமாக ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வழி வகை செய்ய வேண்டிய செயலாக இருக்கும்.

பாஜக எப்பொழுதும் தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை பலவீனப்படுத்தி அதன் மூலம் தனக்கு ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என பல மாநிலங்களில் நடைபெற்று வருவதாக கேள்விப்பட்டிருப்போம். அதே நிலை தற்போது புதுச்சேரியிலும் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். விழித்துகொள்வது நல்லது.

புதுச்சேரியில் கூட்டணி அரசில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டால் 2024 பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில கழக இணைச் செயலாளர் ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் நாகமணி, மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், உழவர்கரை நகர அவைத்தலைவர் டாக்டர். கணேஷ் ஆகியோர் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...