புதுவை மின்துறை தனியார்மய மற்றும் கார்ப்ரேஷன் மய எதிர்ப்பு போராட்ட குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை 300 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தில் இயங்குவதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டு இருந்தார் புதுவை மின்துறை நஷ்டத்தில் இயங்குகிறது மேலும் அதனை புனரமைக்க நிதி தேவைப்படுகிறது என்கிற காரணத்தை கூறி அந்த துறையை தனியார் மயப்படுத்தினால் சிறப்பாக செயல்படும் என்றும் கூறியுள்ளார். மத்திய மின்துறை அமைச்சர் கடந்த மாதம் புதுவை வந்து சென்றதன் நோக்கம் என்ன? புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை மற்றும் மருத்துவம் துறைமுகம் போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைக்க புதுச்சேரி அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது அதன் வெளிப்பாடு தான் தற்போது மின்துறை அமைச்சர் அவர்கள் கூறி இருக்கும் காரணம். மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுவை உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார கம்பெனிகளை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படு...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.