புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் கல்வித் துறையில் கௌரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பாலசேவிகா போன்ற பணியிடங்கள் அரசு பணியிடங்கள் ஆகும். கடந்த கால திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மேற்குரிய சுமார் 292 அரசு பணியிடங்கள் சட்டத்துக்கு விரோதமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சட்டரீதியாகவும் மனிதாபமான அடிப்படையிலையும் இவ்வாறு பணியில் உள்ள ஒப்பந்த ஆசிரியர் பெருமக்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிய அரசு பல்வேறு ஓட்டை உடைசல் காரணங்களை எடுத்துக் கூறி அவர்களுக்கு நியாயம் வழங்குவதை தடுத்து வந்தது. அரசுப் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், தொகுப்பு ஊழியர்கள் சம்பந்தமாக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வழக்கின் மேல்முறையீட்டில...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.