உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களது மருத்துவ கல்வி தொடர மத்திய,மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசங்கரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த புதுச்சேரி மாணவர்கள் 18 பேர் நாடு திரும்பினர். மேலும் எட்டு மாணவர்களை மீட்க புதுவை அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனில் இருந்து புதுச்சேரி வந்தடைந்த உழவர்கரை தொகுதியை சேர்ந்த மாணவன் அரவிந்தை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் மாணவரின் இல்லத்திற்கு சென்று வரவேற்று நலம் விசாரித்தார். மேலும்,உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களது மருத்துவ கல்வி தொடர மத்திய,மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசங்கரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.