புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுச்சேரி மாநிலத்தை உள்ளடக்கிய காரைக்கால், மாஹே ஏனாம் பகுதிகளில் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. அதுவே சட்டமன்ற உறுப்பினர்களின் நோக்கமாகும். மக்களால் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அந்தெந்த பகுதியில் இருக்கும் குறைகளை சுட்டிகாட்டினால் அதை நிவர்த்தி செய்து கொடுக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் IAS அதிகாரிகளும் அந்தெந்த துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆவர். இவர்கள் மக்களுக்கான பிரச்சனைகளில் உள்ள குறைபாடுகளை களைய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் சில IAS அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நான்கு சுவற்றுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு அந்தெந்த துறை தலைவர்களையும் இயக்குநர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்று தங்களின் ஆளுமையை திணித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் புதுச்சேரி மாநிலத்தில் மூன்று அதிகார மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஒன்று கவர்னர் அலுவலகம், இ...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.