முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்துறை ப்ரீபெய்ட் திட்டத்தில் இமாலய ஊழல்‌.! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

புதுச்சேரியை ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. புதுச்சேரியை ஆளும் முதலமைச்சர் மக்களுக்கு கடுகளவு நல்லது செய்துவிட்டு, முழு பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு ஊழலை அரங்கேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. ஆனால் புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். தொழிலாளர்களின் எண்ணத்திற்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சொல்லிக்கொண்டே, தனியார்மய வேலைகள் தொடங்கி டெண்டர் விடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு உள்ளதால் தனியார்மய டெண்டர் திறக்கப்படாமல் உள்ளது. விரைவில் இதற்கு தீர்வு கண்டு தனியாரிடம் மின்துறையை புதுச்சேரி அரசு ஒப்படைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இந்நிலையில் மாபெரும் இமாலய ஊழலுக்கு முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் கைகோர்த்துள்ளனர். மத்திய அரசிடம் சுமார் ரூ.251 கோடி கடனாக பெற்று முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டிய ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த தொகையை புதுச்சேரி மக்கள் வரிப்பணத்திலிருந்து வரும்காலத்தில் புதுச்சேரி அரசு திருப்பி செலுத்த உள்ளது. மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துவிட்டு, அவசரகதியில் மக்கள் வரிப்பணத்தில் மீட்டரை மாற்ற ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன?மாபெரும் இமாலய ஊழலை திட்டமிட்டு நடத்தவே இந்த ஒப்பந்தம் போட்டுள்ளனர். வரவிருக்கும் புதுச்சேரி மின்துறை தனியார் நிறுவன முதலாளிக்காகவே மக்கள் வரிப்பணம் ரூ.251 கோடி செலவிடப்படுகிறது. இந்த நிதி மாற்று வழியில் இணைந்த கைகளுக்குத்தான் திரும்பும் என புதுச்சேரி அரசு பதவியில் உள்ள உயர் அதிகாரிகளே வேதனை தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞானரீதியில் மாபெரும் ஊழலுக்கு வழி வகுக்கும் இத்திட்டத்தை உடனடியாக புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் கைகோர்த்து, கைவிட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்துகிறோம். இந்த மாபெரும் இமாலய விஞ்ஞானரீதியிலான ஊழலை எதிர்த்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர், மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர், அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்களின் அனுமதி பெற்று சட்ட போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...