புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும், ஆட்சியாளர்களும் ஊழல், முறைகேடு அற்ற வெளிப்படையான, நம்பகத்தன்மைக்கு உகந்த ஆட்சியை தர வேண்டும். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த அரசு புதுச்சேரி மக்களிடம் நம்பகத்தன்மையை நாள்தோறும் இழந்து வருகிறது. புதுச்சேரி மாநில மக்களின், இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் திட்டங்களுக்கு எந்தவித தயக்கமும் இன்றி முதலமைச்சர் அனுமதி அளித்து வருகிறார். புதுச்சேரி மக்களையும், மாநிலத்தையும் பாதுகாப்பதே தனது கடமை, அரசு ஊழியர்களின் நலனை பாதுகாப்போம் என மேடைக்கு மேடை வாய் ஜம்பமாக பேசுகிறார். அதேநேரத்தில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி, கவர்ச்சி நடன மதுபார்களுக்கு அனுமதி, மின்துறை தனியார்மயம் என புதுச்சேரி மாநில மக்கள், அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிரான திட்டங்களை சிறிதும் கவலையோ, அச்சமோ இன்றி தொடங்குகிறார். தவறுகளை தட்டிக்கேட்கும் தாய்மார்களிடம், முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சுட்டிக்காட்டி, இதற்கு நிதி எங்கிருந்த...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.