புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் நேற்றைய தினம் தமிழ் கடவுள் முருகனின் விழாவான தைப்பூச தினம் கொண்டாடப்பட்டது. மேலும், இராமலிங்க அடிகளார் முக்தி அடைந்த தினமான தைப்பூச தினத்தன்று ஜோதி வடிவாகிய வள்ளலாரை வணங்கி வருகின்றனர்.
இந்த தைப்பூச திருநாளன்று மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்திருந்தது. ஆனால் அனைத்து இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி அரசு அதிகாரிகள் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் தங்கள் பணியினை சரிவர செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதே முக்கிய காரணமாகும்.
மத்திய அரசினால் கொண்டுவரப்படுகின்ற மாநிலத்திற்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தபடாமலும், திட்டத்திற்கான நிதியை செலவு செய்யாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட காலமாக (3 ஆண்டுகள்) ஒரே துறையில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுக்கு உட்பட்ட நாட்டின் பிற பகுதியின் UT பகுதிகளுக்கு சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய மத்திய அரசை அணுகி வழியுறுத்தபடும்.
தேசிய ஜனநாயக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து முடக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. எனவே அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் மத்திய தணிக்கை குழுவின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட காலமாக பணிபுரியம் அரசு உயர் அதிகாரிகளின் வங்கி கணக்குள் மற்றும் சொத்துக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களிடம் புதுச்சேரி பாஜக சார்பாக கோரிக்கை வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக