முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுச்சேரி அதிகாரிகளுக்கு பாஜக தலைமை கண்டனம்.!

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் நேற்றைய தினம் தமிழ் கடவுள் முருகனின் விழாவான தைப்பூச தினம் கொண்டாடப்பட்டது. மேலும், இராமலிங்க அடிகளார் முக்தி அடைந்த தினமான தைப்பூச தினத்தன்று ஜோதி வடிவாகிய வள்ளலாரை வணங்கி வருகின்றனர்.

இந்த தைப்பூச திருநாளன்று மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்திருந்தது. ஆனால் அனைத்து இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி அரசு அதிகாரிகள் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் தங்கள் பணியினை சரிவர செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதே முக்கிய காரணமாகும்.

மத்திய அரசினால் கொண்டுவரப்படுகின்ற மாநிலத்திற்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தபடாமலும், திட்டத்திற்கான நிதியை செலவு செய்யாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட காலமாக (3 ஆண்டுகள்) ஒரே துறையில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுக்கு உட்பட்ட நாட்டின் பிற பகுதியின் UT பகுதிகளுக்கு சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய மத்திய அரசை அணுகி வழியுறுத்தபடும்.

தேசிய ஜனநாயக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து முடக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. எனவே அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் மத்திய தணிக்கை குழுவின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட காலமாக பணிபுரியம் அரசு உயர் அதிகாரிகளின் வங்கி கணக்குள் மற்றும் சொத்துக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களிடம் புதுச்சேரி பாஜக சார்பாக கோரிக்கை வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...