புதுச்சேரி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் பாஸ்கர் (எ)தஷ்ணாமூர்த்தி அவர்களை, அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி மக்கள் அரும்பாடுபட்டு வெற்றி பெறச் செய்தோம்.. அவர் வெற்றி பெற்று சுமார் 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை. 1)தான் வெற்றி பெற்றவுடன் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு சொசைட்டி மற்றும் கிராம வங்கி மூலம் சிறு வியாபாரம் செய்ய லோன் வாங்கித் தருவதாக கூறினார்!செய்தாரா? 2) அரியாங்குப்பத்தில் இருந்து நகரப்பகுதிக்கு சென்றடைய போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், மற்றும் அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் நிலை அறிந்து அதற்கென்று ஏதேனும் ஆளுகின்ற தன் சொந்த கட்சி முதல்வரிடம் சென்று ஏதேனும் மனு அளித்தாரா?...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.