முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜக - என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது -சிபிஐ குற்றச்சாட்டு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,


புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் எம்.தீனதயாளன் லஞ்சம் வாங்கும் போது மத்திய குற்ற புலனாய்வுத் துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் செயற்பொறியாளரும், உதவி பொறியாளரும் சிக்கியுள்ளனர். பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இது புதுச்சேரி மாநில என். ஆர். காங்கிரஸ்- பிஜேபி அரசாங்கத்தின் லஞ்ச லாவண்ய செயல்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளர் செய்த லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருக்கிற ஆட்சியாளர்கள் யார்...? ஆளும் கட்சிகளுக்கு எவ்வளவு பங்கு சென்றிருக்கிறது போன்ற விபரங்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் உருவாகியிருக்கிற அரசாங்கத்தின் மாபெரும் கட்டமைப்புகளும், திட்டங்களும் இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளால் கொள்ளையடிக்கப்பட்டுகின்றன.

    சிபிஐ சோதனையில் பிடிப்பட்ட ஆதாரங்கள், கோப்புகள், டைரிகள், விபரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்த உயர் நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். 

    பொதுப்பணித்துறை மட்டுமல்ல கலால் துறை மூலமாக மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதிலும் ரெஸ்டோபார்கள் அனுமதி வழங்குவதிலும் நடந்துள்ள ஊழல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    வருவாய் துறை மூலம் நிலவணிகம் என்பது சில முக்கிய அரசியல்வாதிகளால் கொள்ளைக்கூடாரமாக மாற்றப்பட்டிருக்கிறது. காமாட்சி அம்மன் கோயில் நில அபகரிப்பு, காரைக்கால் கோவில் நில அபகரிப்பு போலி பத்திர பதிவுகள் மூலம் நடந்த சில அபகரிப்பு மோசடிகள் அதற்கு உடந்தையாக இருந்த கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவுத்துறை தலைமை பதிவாளர், நில அளவுத்துறை இயக்குனர், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுகாதாரத் துறையிலும் ஊழல் நடைபெறுகிறது. 

    இந்த நான்கு ஆண்டுகால என்.ஆர்.காங்கிரஸ்- பிஜேபி ஆட்சியில் அரசின் பல முக்கியத்துறைகளில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களின் வரிப்பணமும், அரசாங்கத்தின் திட்ட நிதிகளும், அரசு சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன. 

    இதற்கு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். 

     விசாரணைகள் அனைத்தும் அரசியல் தலையீடுயின்றி நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...