முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வார்த்தை ஜால பட்ஜெட் ; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் - 4 அம்ச - பட்ஜெட் என அறிவித்து இவர்களுக்கு பிரயோஜனமில்லாத பட்ஜெட்டாக இருக்கிறது. விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலை (MSP) அறிவித்ததால் விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என்ற புளுகு மூட்டையை அவிழ்த்து உள்ளார். தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசும்- விவசாயிகள் போராட்ட குழுவினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் என்பது அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதுதான் இது நிறைவேற்றப்படவில்லை. கடந்த காலத்தில் பொய்யான வாக்குறுதி அளித்தது போன்றே..... இப்போது 5 ஆண்டுகளில் 4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற அறிவிப்பு- எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே எனும் பாடல் வரி தான் நினைவுக்கு வருகிறது. ஏழைகள் வாழ்வு மேம்பாட்டிற்காக எந்த திட்டமும் இல்லை. 80 கோடி பேர் ஏழ்மையிலும், வறுமையிலும் இருக்கிறார்கள் என்று நிர்மலா சீதாராமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.  மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இ...

ஆகஸ்ட் 4; முதல்வரை அலர்ட் செய்யும் பாஜக..!

புதுச்சேரி பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் அவர்களது பிறந்தநாள் வருகின்ற ஆகஸ்டு 4ம் தேதி வருகிறது. அதற்கு அவரது தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு பேனர்களை வைத்து வருகின்றார்கள். காமராஜர் அவர்கள் கோடிக்கணக்கான ஏழை மாணவர்கள் படிப்பதற்காக ஏராளமான கல்வி நிறுவனங்களையும் உருவாக்கிய பெருமை ஊழற்ற நேர்மையான ஆட்சியைக் கொடுத்த காமராஜர் அவர்களையே சாரும். கல்விக்கு கண் திறந்த காமராஜர் அவர்களை பின்பற்றும் புதுவை முதல்வர் அவர்கள், அதுபோல இந்த ஆண்டு முதல்வர் அவர்களுக்கு தனது தொண்டர்களுக்கு கட்டவுட் மற்றும் பேனர் வைக்கும் பணத்தில், ஏராளமான ஏழை மாணவர்கள் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம், பொறியியல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் இடம் கிடைத்து, முதலாம் ஆண்டு கல்வித் தொகையை கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிற்கும் சூழ்நிலையில் உள்ள கூலி தொழிலாளர்கள், தனியார் தொழிலாளர்கள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவர்கள் அவர்களுக்கு உயர்கல்வியை கற்க முதலாம் ஆண்டு கல்வித் தொகையை முதல்வர் பிறந்த நாள் பரிசாக கட் அவுட் பேனர்...

ESI மாதிரி மருத்துவமனை;நேரு எம்எல்ஏ கோரிக்கை

புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் புதுச்சேரியிலும் மாதிரி மருத்துவமனை அமைய வேண்டும் என்பது அனைத்து தொழிலாளர்கள் விருப்பம். காரணம் எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை பெற முடியும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. தொழிலாளர்களிடம் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகின்ற தொகையில் இருந்து தான் இந்த திட்டம் செயல்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் அந்த திட்டப்படி தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இந்தியாவிலே Model Hospital இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரியில் ESI Model Hospital இல்லாததால் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் லட்சகணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நிலை உள்ளது. இஎஸ்ஐ தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மருத்துவத்திற்கான பணம் பிடிக்கப்படுகிறது. அப்படி உழைத்து சம்பாதித்த பணத்தை இஎஸ்ஐக்கு பிடித்தம் செய்து கட்டிய பிறகும் அவர்களுக்கான இலவச சிகிச்சை கிடைக்காமல் இருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். மத்திய இஎஸ்ஐ கார்ப்பரேஷன் அந்தந்த மாநி...

ஜிப்மர் செவிலியர் பணியிடம்; 25% இட ஒதுக்கீடு வழங்க கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக, மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் புதுச்சேரியில் அமைந்திட, மாநில அரசின் சார்பில் நிலம், மின்சாரம், சாலை வசதி போன்ற கட்டமைப்புகள் வழங்கப்பட்டது. இதற்காக புதுச்சேரியை சேர்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடும் உறுதி செய்யப்பட்டது.  மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி மாநில மக்கள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மருத்துவ உதவி பெற்றிடும் நிலையில் உள்ளது. இந்த ஜிப்மர் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரியை சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது.‌ காலப்போக்கில் ஜிப்மர் நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையினாலும் புதுச்சேரி மாநில அரசின் அலட்சியப் போக்கினாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி சார்ந்தவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது 165 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்க...

இளைஞர்களுக்கு துரோகம் செய்யும் என்.ஆர்- பாஜக அரசு.! இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டு.!

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி அரசு பணிக்கான குரூப்-B நேரடி ஆட்சேர்ப்பில் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காதது வேதனை அளிக்கிறது. அரசு வேலைக்கான வயது உச்ச வரம்பை தளர்வு பெற மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகியது தவறு. மாநில அமைச்சரவை பரிந்துரையின் பேரில் துணைநிலை ஆளுநர் அவர்கள் அனுமதி வழங்க முடியும். வயது வரம்பு தளர்வு பெற மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகியது மூலம் ஆளும் என் ஆர், பி ஜே பி அரசாங்கம் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதோடு இளைஞர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி அவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி அரசு பள்ளியில் டி ஜி டி அதாவது கிராஜுவேட் டீச்சர் அப்பாயிண்ட்மெண்ட் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இளைஞர்களுக்கு அரசு பணியிடங்களை வழங்குவதற்கு முயற்சி செய்தபோது மத்திய பிஜேபி அரசும் அப்போதைய கவர்னரும் தடையாக இருந்தனர். ஒரு இளைஞர் 2010ல் பி.எட் படித்திருந்தால் அவருக்கு ...

கோயில் இடம் ஆக்கிரமிப்பு.! சாமிநாதன் புகார்.!

புதுவை மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,  புதுச்சேரி மாநிலம், இலாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டையில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 1,50,000 சதுரடி பரப்பளவு கொண்ட கொள்ளிமேடு மைதானம் கடந்த 50 ஆண்டுகளாக பலவிதமான பிரச்சனையுள்ள இடமாக இருந்து வருகிறது. இந்த கொள்ளிமேடு மைதானத்தை சமீபகாலமாக அரசியல் பிரமுகர்களின் துணையோடு மனைகளாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பெத்துச்செட்டிப்பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மேற்பார்வையிலும், பராமரிப்பிலும் இருந்து வருகிறது. இது குறித்து முன்னாள் ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆளுனர் நேரிடையாக வந்து பார்வையிட்டு மிகவிரைவில் அரசுடையாக்கப்பட்டு, பெத்துச்செட்டிப்பேட்டை, சாந்திநகர், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், செல்லபெருமாள்பேட்டை மற்றும் ஆனந்தா நகரில் வசித்து வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்காக பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம...