முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ESI மாதிரி மருத்துவமனை;நேரு எம்எல்ஏ கோரிக்கை

புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் புதுச்சேரியிலும் மாதிரி மருத்துவமனை அமைய வேண்டும் என்பது அனைத்து தொழிலாளர்கள் விருப்பம். காரணம் எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை பெற முடியும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.
தொழிலாளர்களிடம் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகின்ற தொகையில் இருந்து தான் இந்த திட்டம் செயல்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் அந்த திட்டப்படி தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இந்தியாவிலே Model Hospital இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரியில் ESI Model Hospital இல்லாததால் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் லட்சகணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நிலை உள்ளது. இஎஸ்ஐ தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மருத்துவத்திற்கான பணம் பிடிக்கப்படுகிறது. அப்படி உழைத்து சம்பாதித்த பணத்தை இஎஸ்ஐக்கு பிடித்தம் செய்து கட்டிய பிறகும் அவர்களுக்கான இலவச சிகிச்சை கிடைக்காமல் இருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
மத்திய இஎஸ்ஐ கார்ப்பரேஷன் அந்தந்த மாநிலங்களில் Model Hospital அமைக்க 1975ல் தகுந்த இடங்களில் பெற்று சிறந்த மருத்துவமனைகளை நிறுவி வருகிறது. அதேபோல மத்திய இஎஸ்ஐ கார்ப்பரேஷன் நம் புதுச்சேரி மாநிலத்திலும் ESI மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் இருக்ககூடியதாக செயல்ப வேண்டும் என்ற நோக்கத்தில் Model Hospitalஐ அமைக்க அனுமதியளித்துள்ளது.
இந்த மருத்துவமனை கட்டுவதற்கான, முழுசெலவையும் மத்திய இஎஸ்ஐ
கார்ப்பரேஷன் ஏற்கிறது. இதற்கு புதுச்சேரி மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். தற்போது அதற்குண்டான இறுதிக்கட்ட கோப்பு முதல்வர் அவர்களின் ஒப்புதலுக்கு உள்ளதாக தெரிகிறது. இந்த ESI Model Hospital வந்தால் தான் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். ஏன் என்றால் புதுச்சேரியில் ஏறக்குறைய மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால் இங்கு போதிய வசதியில்லாமல் இங்கு செயல்படும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். அங்கு போதுமான மருத்துவசிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள். இதனால் அவர்கள் உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாததாலும், போதிய படுக்கைவசதி இல்லாததாலும், அவர்களுக்கான சிகிச்சை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கான உயர்சிகிச்சை கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அதிக பண செலவு செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடனாளியாக மாறிவருகிறார்கள்.

இஎஸ்ஐ மருத்துவமனையின் தற்போதைய நிலைமைகள் பற்றி கீழ்வருமாறு விவரிக்கப்படுகிறது.
1. பொது மருத்துவத்திற்கான மருத்துவர் இல்லை.
2. காது, மூக்கு, தொண்டைக்கான மருத்துவர் இல்லை. மேலும் அவற்றுக்கான
உபகரணங்களும் இல்லை.
3. கண் மருத்துவர் இல்லை
4. மகப்பேறு மருத்துவர் இல்லாததால், இங்கு பிரசவம் பார்ப்பது இல்லை.
5. எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவர் இல்லை. ஆதனால் எலும்பு முறிவு
அறுவை சிகிச்சை நடைபெறுவது இல்லை.
6. தோல் வியாதிக்கான மருத்துவர் இல்லை.
7. கதிரியக்க நிபுணர் (RADIOLOGIST) இல்லை. அதனால் இங்கு ஸ்கேன் பார்ப்பது இல்லை. 8. பல் மருத்துவத்திற்கான நவீன உபகரணங்கள் இல்லை.
9. டைலர் இல்லை
10. Barber இல்லை
11.நவீன அறுவை கூடம் மற்றும் வெண்டிலேட்டர் இல்லை.
12. சமையல் கூட உதவியாளர் இல்லை.
13. வார்ட் அட்டெண்டர் பணியில் இருந்த அனைவரும் தற்போது பணியில் இல்லை. அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணி செய்கிறார்கள்.
14. இரத்த பரிசோதனை கூடத்தில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை மட்டும் பார்க்கபடுகிறது. மற்ற பெரும்பாலான முக்கிய பரிசோதனைகள் பார்க்கப்படுவதில்லை.
15. மருத்துவமனைக்கென மருத்துவ அவசர ஊர்தி (Ambulance) இல்லை.
16. மருத்துவமனைக்கென தனியாக பாதுகாவலர்கள் இல்லை. மருத்துவமனையில் தொலைக்காட்சி மற்றும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை.
17. மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு காலை இட்லி பொங்கல், கிச்சடி வழங்கபடவேண்டும். ஆனால் ரொட்டி, பால் மட்டும் தான் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட நிலையில் செயல்படும் புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையை (Model Hospital) மாதிரி மருத்துவமனையாக கட்டமைத்தால் தொழிலாளர்கள் அல்லல்படும் நிலைமை மாறி அவர்களுக்கான உரிய உயர்சிகிச்சை நம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நேரடியாக கிடைப்பதுடன் அவர்களது குடும்பத்தாரும் இதன் மூலம் பயன்பெறுவார்கள். மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நம் மாநிலத்தில் இஎஸ்ஐ (Model Hospital) மாதிரி மருத்துவமனை துரிதமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...