ரெயின்போ நகர் மகளிர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில், வரும்,நாளை (16-01-2024) நடக்க உள்ள மெகா கோலப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரெயின்போ நகர் மகளிர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் இணைந்து நடத்தும் மெகா கோல போட்டி நடக்கிறது. ரெயின்போ நகர் 4-வது குறுக்கு வீதியில் காலை 5.30 மணியளவில் போட்டி தொடங்குகிறது. முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே கோல போட்டியில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக ஃப்ரிட்ஜ், இரண்டாவது பரிசு எல்இடி டிவி, மூன்றாவது பரிசு கிரைண்டர், நான்காவது பரிசாக எலக்ட்ரிக் கெட்டில் மற்றும் 100 நபர்களுக்கு மேக்கப் கிட் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி மற்றும் வைத்திலிங்கம் எம்பியின் தனி உதவியாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளருமான வினோத் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர். இந்த போட்டியில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.