புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். நீதி தேடி வருவோருக்கு ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன் பாவமும், பழியும் எய்தி தானே அழிவான். இது திருவள்ளுவன் வாக்கு. புதுச்சேரி மாநிலத்தில் நடப்பது மன்னராட்சியும் அல்ல, ஆட்சியில் அமர்ந்திருப்பவர் மன்னரும் அல்ல. ஏழை, எளிய நடுத்தர மக்கள் நல்வாழ்வு கிடைக்கும் என நம்பி அளிக்கும் வாக்குகளால்தான் ஆட்சி எனும் அரியணை அலங்கரிக்கப்படுகிறது. நான் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும், நான் சொன்னால் தட்டாமல், எல்லோரும் செய்ய வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். முதலமைச்சர் நினைத்தது எது நடக்கவில்லை? கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 300க்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்தார். பதவியேற்றவுடன் முதியோர் உதவித்தொகையை ரூ.500 உயர்த்தினார். 17 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்க ஆணை பெற்றார். காரைக்கால் துறைமுகத்தை தனியாருக்கு கைமாற்ற சம்மதம் பெற்றார். புதுச்சேரியில் 6 மதுபான ஆலைகளை தொடங்க அனு...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.