முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படும் முதலமைச்சர் ரங்கசாமி.. அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதுச்சேரி அரசு தொடர்ந்து மாணவர்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய எந்த குறைபாடுகளையும் சரி செய்யவில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள ஒரே அரசு மருத்துவ கல்லூரியின் அங்கீகாரமும் ரத்தாகி உள்ளது. தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாகவே தொடர்ந்து முதலமைச்சரும், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகளும் செயல்படுகின்றனர்.

அரசு மருத்துவ கல்லூரிக்கு மீண்டும் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுத்ததுபோல முதலமைச்சரும், அதிகாரிகளும் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளனர். தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகளை சீர்செய்த பல மாநில மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு மட்டும் இன்று வரை மாணவர் சேர்க்கையை நடத்த அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கவில்லை. புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மாணவர்கள் எதிர்காலம் தொடர்பான இவ்விஷயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த வரும் 26ம் தேதி மாலை 3 மணியுடன் காலக்கெடு நிறைவடைகிறது. ஆனால் இதுவரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை நடத்த எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. நீட் தேர்வு முடிவு வெளியாகும் முன்பே அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதிபெறுவோம் என முதலமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால் உறுதியளித்தபடி அனுமதியை பெறவில்லை, இதுவும் முதலமைச்சரின் கபடநாடகம்தான். தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கும் என தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். தேசிய மருத்துவ ஆணையம் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்தால் மட்டுமே இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

புதுச்சேரி முதலமைச்சரும், அதிகாரிகளும் சுயநலம் கருதாமல், உடனடியாக மாநில ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெற உரிய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...