முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்; முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் வலியுறுத்தல்

புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில அரசு கலை அறிவியல் கல்லூரி கழிவறை தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சராசரியாக ஒரு வீடு தரமாக கட்டினால் 50 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும். ஆனால் அரசு கட்டிடங்களில் ஊழல்கள் நிறைந்துள்ளதால் பத்தாண்டுகள் தாங்குவது அரிதாக உள்ளது. பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் பல அரசு பள்ளிகள், கிராமப்புறம் மற்றும் நகர் புறத்தில் இதே போல் நிலைமை நீடித்து வருகிறது. உடனடியாக அரசு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும். புதுவையில் இதுவரை ஆட்சி செய்த அரசுகளும், தற்போது ஆளுகின்ற அரசும் புதுச்சேரி மக்கள் மீது அக்கறையில்லாமல், நிதி இல்லை என்று ஒவ்வொரு முறையும் காரணம் காட்டிவருகிறது. இதுவரை புதுச்சேரியில் ஆட்சி அரசுகளும், தற்போது ஆட்சி செய்துவரும் அரசாங்கமும், நிதியை தேவையற்ற முறையில் செலவு செய்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத்தில் அரசு பல கோடி ரூபாய்க்கு புதிய கார்களை வாங்கி சொகுசாக பயணம் செய்து வரும், அனைவரும் அரசு பள்ளி கட்டிட...

பாண்லேவில் கொள்ளைப்புற நியமனம்; ஏஐடியுசி கண்டனம்..

ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பாண்லே நிறுவனம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்து வந்தது இடையில் சில ஆண்டுகள் இந்நிறுவனம் நிர்வாக சீர்கேடு காரணமாக நஷ்டத்தில் இயங்கியது. தற்பொழுது இதிலிருந்து மீண்டு நஷ்டமும் இல்லை, லாபமும் இல்லை என்ற நிலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பால், மற்றும் பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், மோர், பாதாம் பால், தயிர், போன்ற பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு 60க்கும் மேற்பட்ட பார்லர்களும், 200க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பாண்லே நிர்வாகம் விற்பனைக்காக கொள்முதல் செய்யும் பாலில் 80 சதமான பாலை முகவர்கள் மூலமாக விற்கப்பட்டு வருகிறது. தற்பொழுது பாண்லே நிர்வாகம் நடத்தி வந்த  சில பார்லர்கள் செயல்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் நிறுவனம் நடத்தி வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பார்லர்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நிரந்தர ஊழ...