புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவி வரும்போது பணிவும், பதவி பெற்ற பின் அளித்த வாக்குறுதிகளும் நினைவுக்கு வரவேண்டும். பதவிக்கு வருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவது மக்களை வேதனையில் ஆழ்த்தும். என்ஆர்.காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியில் நகராட்சி எல்லைக்குள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. தற்போது நாளை நவம்பர் 1ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அந்த வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பொருளாதார போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் ப...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.