நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மையம் சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் துப்புரவு பணி நடைபெற்றது
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும்,முன்னாள் ராணுவ வீரருமான டாக்டர் சசிகுமார் தலைமையில், மையத்தின் நிர்வாகிகள் புதுச்சேரி முழுவதும் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு தேசப்பற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தவறான பாதையில் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மையத்தின் மாணவர்கள் மற்றும் பாத்திமா மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து காமராஜர் மணி மண்டபத்தில் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னாள் ராணுவ வீரர் டாக்டர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாத்திமா பள்ளி தலைமை ஆசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர், புதுச்சேரி நேஷனல் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியை துவக்கி வைத்து வாழ்த்தினர்.
மேலும், இளங்கோவன், கலைச்செல்வன் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மைய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக