புதுச்சேரி 15-வது சட்டப்பேரவை நான்காவது கூட்டத்தொடரில் இன்று (28/03/2023) பூஜ்ஜியம் நேரத்தில் பேசிய உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, இந்து அறநிலையத்துறையானது திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை பற்றி வரும் புகார்களை கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் இந்த துறையின் உள்ளவர்களே ஊழல் செய்பவர்களாக இருக்கிறார்கள். மகாத்மா காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செய்த செலவுகளில் முறைகேடு மற்றும் பெரியளவில் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. அதே போல கோயிலுக்கு சொந்தமான 1. பெல்காம் வீதி, 2. தியாகுமுதலியார் வீதி, 3.பெருமாள்கோயில் வீதி ஆகிய மூன்று இடங்களில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிய போது அதிலிருந்த மர வாசகால்கள் மர திராய்கள் மற்றும் அதிலிருந்து கிடைத்த இரும்பு தளவாடங்கள் யாவும் கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை. அதே போல வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கதவு எண்:58 காமாட்சியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு சொத்தை தனிநபர் ஆக்கி...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.