புதுச்சேரி மாநில ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி நியாய விலை கடை கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் 336 நியாய விலை இருந்து வருகிறது. இந்த கடைகளில் 580 மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இங்கு பணிபுரிக்கூடிய ஊழியர்கள் அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள். அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அரசோடு நடத்திய பேச்சு வார்த்தையில் நியாய விலை கடைகளை திறந்து சம்பளம் வழங்கப்படும் எனவும், நிலுவை சம்பளம் கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டு நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி இன்றைய தினம், முதலமைச்சரை சந்தித்து முறையிடுவதற்கு ஊழியர்கள் அனைவரும் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று, முதலமைச்சரை சந்தித்து நியாய விலை கடைகளை திறக்க வேண்டும், நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனிடையே இங்கு வந்த காவல் துறையினர், ஊழியர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இத்தகைய அரசின் நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல.! இதனை வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் ரங்கசாமி,உடனடியாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்கி, ரேஷன் கடையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கைது செய்த அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என
ஏஐடியுசி புதுச்சேரி மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக