முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வழக்கறிஞர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்

புதுச்சேரி நீதிமன்றத்தில் கொரானா விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்,புதுவை நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்கு களையும் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஐகோர்ட்டு அனுமதிக்க வேண்டும் என்றும், வாரிசு உரிமை வழக்குகளை உரிமையியல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நீதிமன்றம் வாயில் முன்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் குமரன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்,சங்க நிர்வாகிகள் மற்றும் 100 கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சங்க செயற்குழு உறுப் பினர் மணிகண்டன் விபத்தில் மரணமடைந்ததாக தகவல் வந்ததையடுத்து வழக்கறிஞர சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆறுதல்!

காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட லட்சுமி நகரில் திடீர் தீ விபத்தால் சேதமான வீட்டின் குடும்பத்தாரை சந்தித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் பாஜக பிரமுகர் அசோக்குமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தனர் காலாப்பட்டு தொகுதி நாவர்குளம் வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இதனையடுத்து தகவலறிந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், நாவர்குளம் வார்டு பாஜக பிரமுகர் அசோக்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அரசு சார்பில் நிவாரணம் பெற்றுத் தருவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் சார்பில் நிவாரணம் வழங்குவதாகவும் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது நாவர்குளம் வார்டு பாஜக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்

இறைபணியில் சாய்.இளங்கோவன்

உழவர்கரை எல்லை மாரியம்மன் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சாய் இளங்கோவன் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட உழவர்கரை எல்லை மாரியம்மன் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவிற்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது. உழவர்கரை தொகுதியில் தொடர்ந்து சமூகப்பணி, கல்விப்பணி, இறை பணி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் சாய் இளங்கோவனுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சாய் இளங்கோவன் தனது சொந்த செலவில் அறுசுவை உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவல் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அரசு சார்பில் திருவள்ளுவர் தின விழா: முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் பங்கேற்பு:

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் , சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள்  உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று திருவள்ளுவருக்கு திமுக, அதிமுக,திராவிட கழகம் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் சாய் .இளங்கோவன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

வில்லியனூரில் திருவள்ளுவர் தின விழா

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வில்லியனூர் கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், வில்லியனூர் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வில்லியனூர் கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் வில்லியனூர் தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ முனுசாமி, பங்குத்தந்தை பிச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டு வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, சிறந்த சமூக சேவை செய்த விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் "நல்ல நண்பர்கள்" குழுவிற்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் வில்லியனூர் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி செய்திருந்தார்.

இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்:சாய்.இளங்கோவன்

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும் என உழவர்கரை தொகுதி மக்களுக்கு கரும்புகள் வழங்கி சாய்.இளங்கோவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் பொங்கல் திருநாளை முன்னிட்டு உழவர்கரை தொகுதி முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு சாய் இளங்கோவன் அறக்கட்டளை சார்பில் கரும்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3-வது நாளாக இன்று, உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பிள்ளை பாளையம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு அறக்கட்டளை நிறுவனர் சாய்.இளங்கோவன் வீடு-வீடாக சென்று கரும்புகள் வழங்கி,அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும் என பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முத்துப்பிள்ளை பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மின் கட்டணம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டணத்தை உயர்த்தி மாநில அரசு உத்தரவு 0 - 100 யூனிட் வரையிலான கட்டணம் 1.56-ல் இருந்து 1.90 ஆக உயர்வு 101 - 200 யூனிட் வரையிலான கட்டணம்  2.60-ல் இருந்து 2.75 ஆக உயர்வு   இந்த புதிய மின்கட்டண உயர்வு வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

நமச்சிவாயத்திற்கு பிப்டிக் சேர்மன் பதவி

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பிப்டிக சேர்மன் பதவி வழங்கி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார் புதுவை அமைச்சரவையில் உள்துறை, கல்வி, மின்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருப்பவர் நமச்சிவாயம்.  இவருக்கு இப்போது பிப்டிக் சேர்மன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற் கான உத்தரவை கவர்னர் தமிழிசை பிறப் பித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை பிப்டிக் சேர்மனாக நமச்சிவாயம் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதுவை தொழில்துறை வளர்ச்சியில் பிப்டிக் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் புதிய தொழிற் சாலைகளை கொண்டு வருவது, அனுமதியளிப்பது, சலுகைகள் அளிப்பது, கடனுதவி அளிக்கும் வகையில் பிப்டிக் சேர்மன் பதவியும் அமைச்சர் நமச் சிவாயத்துக்கு வழங்கப் பட்டுள்ளது.

பொங்கல் பரிசு வழங்கும் பணி துவக்கம்

புதுவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ. 490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் பணியினை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார் புதுச்சேரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.490 மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று, கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை முதலமைச்சர் ரங்கசாமி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், ரமேஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலர் உதயகுமார், கூட்டுறவு சிறப்பு செயலாளர் கண்ணன், குடிமைப்பொருள் துறை இயக்குனர் சக்திவேல், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மலிவு அரசியல் விளம்பரம் தேடும் திமுக: அன்பழகன்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்ட போது எதிர்ப்பு தெரிவிக்காத திமுக, மலிவு அரசியல் விளம்பரத்திற்காக பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக,அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார் புதுச்சேரி உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், கூட்டணி கட்சிகளின் நெருக்கடிக்கு பயந்து தமிழகத்தில் பிரதமர் வருகையை ரத்து செய்யும் விதமாக திடீர் என ஊரடங்கை திமுக அரசு அமுல்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டாத்திற்கு லட்சகணக்காண மக்கள் திரண்ட போது எதிர்ப்பு தெரிவிக்காத திமுக,மலிவு அரசியல் விளம்பரத்திற்காக பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும்,துணைநிலை ஆளுநர் அதிகாரத்தை நீதிமன்றம் வரை சென்று பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தற்போது அனைத்து அறிவிப்புகளையும் துணைநிலை ஆளுநர் வெளியிடுகிறார் என குறைகூறுவதற்கு தகுதியில்லை என தெரிவித்தார்.

அகில உலக யோகா நிறைவு விழா

புதுச்சேரியில் 4 நாட்கள் நடைபெற்ற அகில உலக யோகா விழாவின் நிறைவு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார் புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 27-வது அகில உலக யோகா திருவிழா நடைபெற்று வந்த நிலையில் அதன் நிறைவு விழா இன்று கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சுற்றுலாத் துறை செயலர் அருண், சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுலா துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

கல்வி தான் எதிர்காலம்;சாய்.இளங்கோவன் பேச்சு..

உங்களை அடையாளப்படுத்துவதும், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதும் கல்வி ஒன்றுதான் என புத்தாண்டை முன்னிட்டு,உழவர்கரை தொகுதியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் சாய் இளங்கோவன் தெரிவித்தார் புதுச்சேரி சாய் இளங்கோவன் அறக்கட்டளை சார்பில் உழவர்கரை தொகுதி ஜெ.ஜெ நகர் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் சாய்.இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்,எழுதுகோல் இனிப்பு மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளிடையே பேசிய சாய்.இளங்கோவன், உங்களை அடையாளப்படுத்துவதும், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதும் கல்வி ஒன்றுதான் என்றும், எனவே மாணவ செல்வங்கள் கல்வி பயில்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் கவனம் செலுத்தி வெற்றிபெற்று புதுச்சேரியில் பணியாற்ற வேண்டுமென எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் திருமுருகன், கல்வியாளர் சதிஷ் குமார், சசிகுமார்,கோவிந்தராஜன்,பாபு, சத்யன்,ஜெனோ உ...