திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வில்லியனூர் கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், வில்லியனூர் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வில்லியனூர் கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் வில்லியனூர் தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ முனுசாமி, பங்குத்தந்தை பிச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டு வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, சிறந்த சமூக சேவை செய்த விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் "நல்ல நண்பர்கள்" குழுவிற்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் வில்லியனூர் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி செய்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக