முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியில் சுவாமி வீதியுலாவிற்கு அனுமதி மறுப்பு.!

புதுச்சேரியில் அனுமன் ஜெயந்தி வீதி உலாவிற்கு அனுமதி மறுத்த கோவில் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் ஸ்ரீ முத்தலாய் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஊர் மக்கள் சார்பாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அனுமன் உற்சவ சிலை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் உற்சவர் வீதி உலா நடைபெறும் என அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. கோவில் அதிகாரி மற்றும் பொதுமக்கள் அழைப்பு விடுவதாக பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தது.  இந்த நிலையில், அரசு அறிவிப்பின்படி அனுமன் ஜெயந்தி வீதி உலா நடைபெறாது என கோவில் அதிகாரி தன்னிச்சையாக பெயர் பலகையில் எழுதி வைத்ததுடன், காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் இன்று காலை முதல் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : முன்னால் எம்எல்ஏ கண்டனம்.!

புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பிற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் வித்தியாசமாக இருந்தது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருப்பதற்காகவே புதுச்சேரியை விரும்பி வருகை தந்தனர். புதுச்சேரிக்கு என்று தனித்தன்மை இருந்தது. தற்போது, அதை சிதைக்கும் பொருட்டு முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து ஏழை மக்களுடைய வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறார். புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூலித் தொழிலாளியாகவும், தனியாரிலும் வேலை செய்துக் கொண்டு பிரதான வாகனமாக டூவீலர்களை பயன்படுத்தி வருகின்றனர்.  தற்போது அறிவித்துள்ள புத்தாண்டு பரிசான பெட்ரோல் விலை உயர்வால் அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கடந்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சிந்தனை உடைய அரசு தொடர்ந்து அனைத்து தொழிற்சாலைகளையும் மூடியது. பெரிய நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன. புதுச்சேரியில் இ...