உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பிப்டிக சேர்மன் பதவி வழங்கி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
புதுவை அமைச்சரவையில் உள்துறை, கல்வி, மின்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருப்பவர் நமச்சிவாயம்.
இவருக்கு இப்போது பிப்டிக் சேர்மன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற் கான உத்தரவை கவர்னர் தமிழிசை பிறப் பித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை பிப்டிக் சேர்மனாக நமச்சிவாயம் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை தொழில்துறை வளர்ச்சியில் பிப்டிக் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் புதிய தொழிற் சாலைகளை கொண்டு வருவது, அனுமதியளிப்பது, சலுகைகள் அளிப்பது, கடனுதவி அளிக்கும் வகையில் பிப்டிக் சேர்மன் பதவியும் அமைச்சர் நமச் சிவாயத்துக்கு வழங்கப் பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக