முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரு எம்எல்ஏ வலியுறுத்தல்.!

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவை நான்காவது கூட்டத்தொடரில் இன்று (28/03/2023) பூஜ்ஜியம் நேரத்தில் பேசிய உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு,

 இந்து அறநிலையத்துறையானது திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை பற்றி வரும் புகார்களை கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் இந்த துறையின் உள்ளவர்களே ஊழல் செய்பவர்களாக இருக்கிறார்கள். 
 மகாத்மா காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செய்த செலவுகளில் முறைகேடு மற்றும் பெரியளவில் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. அதே போல கோயிலுக்கு சொந்தமான 1. பெல்காம் வீதி, 2. தியாகுமுதலியார் வீதி, 3.பெருமாள்கோயில் வீதி ஆகிய மூன்று இடங்களில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிய போது அதிலிருந்த மர வாசகால்கள் மர திராய்கள் மற்றும் அதிலிருந்து கிடைத்த இரும்பு தளவாடங்கள் யாவும் கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை.  
 அதே போல வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கதவு எண்:58 காமாட்சியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு சொத்தை தனிநபர் ஆக்கிரமித்து அவர்களுக்கு சொந்தமாக்க முயற்சிப்பதை தடுக்காமல் இந்த கோயிலின் ட்ரஸ்டிகளே துணை போகும் விதமாக இருக்கிறார்கள்.
  மேற்கண்ட கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தின் பட்டா போன்ற ஆவணங்கள் அரசு பதிவேடுகளில் கோயிலுக்கு சொந்தம் என்று உள்ள நிலையில் இந்த கோயில் ட்ரஸ்டி மற்றும் நிர்வாகிகள் ஆக்கிரமிப்பாளருக்கு துணைப்போகும் விதமாக அந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது இல்லை என்று கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். 
 அதே போல வரதராஜ பெருமாள் கோயிலில் 3.02.2023 அன்று உண்டியல் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இது சம்மந்தமாக காவல் நியைலத்தில் எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதிலேயும் கோயில் நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 அதே போல கீழ் நிலையில் இருந்த அரசு ஊழியர் ஒருவர் 2014 ஆம் ஆண்டு முறைகேடாக குரூப் பதவிக்கு உயர்த்தப்பட்டு Executive Officer ஆக மேற்கண்ட கோயிலுக்கு பணியமர்த்தப்பட்டார். அவர் மேற்கண்ட கோயிலில் பணியமர்த்தப்பட்ட காலத்தில் பெரியளவில் ஊழல் நடந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 கும்பாபிஷேகம் நடத்த கூடிய வேதவிற்பனர்கள் (சிவாச்சாரியர்) ஊதியமாக 29 லட்சம் பணமாக கொடுக்கப்பட்டதாகவும் அதே போல கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் அமைக்க தன்னிச்சையாக ஒரு நிறுவனத்திற்கு ஏறக்குறைய 73 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல கோயில் திருப்பணி செலவுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளது கண்கூடாக தெரியவந்துள்ளது. இதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள ட்ரஸ்டிகளும் இதற்கு உடந்தையாக உள்ளார்கள். அவர்களிடமும் உரிய விசாரனை நடத்தப்பட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...