முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவால் புதுச்சேரி அரசுக்கு களங்கம்.! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரியில் மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆணவத்தின் உச்சத்தில் அதிமுகவை குறைத்து பேசி வருகிறார். அண்ணாமலை அவர்களுக்கு அதிமுகவை பற்றியோ, நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் பற்றியோ பேச எந்த தகுதியும் கிடையாது. 

பொதுவாக ஒரு கட்சியில் தொண்டராக இருந்து பல்வேறு பொறுப்புகளை ஏற்று ஒரு கட்சிக்கு தலைமை தாங்கி வரும்போது தான் கட்சியின் நிலைபாடுகள் பற்றி கூறி தெரியும். நேரடியாக அண்ணாமலை போன்றவர்கள் தலைமை பொறுப்புக்கு வந்ததால் ஆணவத்தின் உச்சியில் அரசியல் என்றால் எண்ணவென தெரியாத வகையில் உலரிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் பாஜகவில் சேரும் போது கூட நாங்கள் அமைதிதான் காத்தோம். அப்போது கூட்டணி, கட்சியின் பண்பு, மாண்புகள் பாஜகவுக்கு இருந்ததா? இல்லை. பாஜகவின் சர்வாதிகார தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த கட்சியினிடைய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எடப்பாடியார் உருவபடத்தை எரிப்பது என்பது அநாகரீகத்தின் உச்சகட்டம். அம்மா போல இருப்பேன் என்பது திமிர்பிடித்த பேச்சு. அதற்கு இவர் அதிமுகவில் தான் இருக்கனும். பாஜகவில் இவருக்கு ரோல் மாடல் யாரும் இல்லையா? பிரதமர், உள்துறை அமைச்சர் என பலரும் உள்ளனர். அண்ணாமலை யாருடைய வாயாக இருப்பதாக தெரிகிறது. தமிழக தலைவர் பாஜக அண்ணாமலை எங்களுக்கு எதிரியின் வாயாக இருக்கிறார். சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலை விவகாரம் குறித்து பேசப்படும்.

புதுச்சேரி அரசுக்கு பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.குடிமை பொருள் வழங்கல் துறைக்கு சென்று அங்கிருந்த அதிகாரியை மிரட்டல் விடுத்து பேசியது தவறான ஒன்று. அந்த துறை அமைச்சரை வைத்துக்கொண்டு பேசினர். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு இப்படி அதிகாரிகளிடம் தவறான போக்கில் நடப்பதை திருத்திக்கொள்ள வேண்டும். மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் செயலாக உள்ளது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இதுபோன்று மீண்டும் அனுமதிக்க கூடாது.

 புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் திமுக அரசுக்கு எதிராக வாக்கு அளித்த மக்களுக்கு எதிராக பாஜக அமைச்சர்கள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.  

பாஜகவினர் சந்தர்ப்பவாத அரசியல் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அதிகாரியை வாய்க்கு வந்தபடி தவறாக பேசகூடாது. நமது ஆட்சியில் மக்களுக்கு வீண் கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பாஜகவின் செயல்பாடு இருக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது காரைக்கால் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஓமலிங்கம் உடனிருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...