புதுச்சேரி ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பிய உத்தரவில், ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படும். அத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இந்த மேம்பட்ட சோதனைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடம் இருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும் எனவும் அடிப்படை பரிசோதனைச் சேவைகள் இலவசமாக தரப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள ஏழை மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற ஜிப்மர் வருகின்றனர். இதில் பலருக்கு ஆயுஷ்மான்பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை. மேலும் மஞ்சள் மற்றும் சிவப்பு கார்டுகள் உள்ளவர்கள் என்று பார்த்து நோய் வருது இல்லை.
ஜிப்மர் கொண்டு வந்து உள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, நோயாளிகள் நலனை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மேதகு துணைநிலை ஆளுநர், மாண்புமிகு முதல்வர் ஆகியோர் ஜிப்மர் நிர்வாகத்தை அணுகி, பழைய முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக