ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, ராகுல் பாதயாத்திரையில் பங்கேற்ற புதுச்சேரி சேவாதள தலைவியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான பெரிய நாயகிக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தை சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் வழங்கி பாராட்டினார்.
ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு சேர்மனமான ஆர்.இ சேகர் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக மாகே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பெற்ற பாதயாத்திரையில், புதுச்சேரியில் இருந்து ஒரே நபராக பங்கேற்ற, சேவாதள மகளிர் அணி தலைவியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான பெரியநாயகிக்கு, சான்றிதழ் மற்றும் கேடயத்தை சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் வழங்கி கௌரவித்தார்.தொடர்ந்து, சேவாதளி மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சேவாதள சீருடையை ஆர்.இ சேகர், திருவேங்கடம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரங்கசாமி,அரசம்மாள், மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி,துணை தலைவி சாந்தி, செயலாளர் நிஷா, நிர்வாகிகள் குணபூசணம்,அனிதா, மற்றும் காங்கிரஸ் பிரமுகர் பிரபு, செயற்குழு உறுப்பினர் அசோகன் மற்றும் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் அமுதரசன், புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக