புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுபோது அவர் கூறியதாவது :
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை பெற்ற முதலமைச்சர் ரங்கசாமிக்கும், புதுச்சேரி மாநில ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி அவர்களுக்கும் அதிமுக சார்பில் பாராட்டுத்தலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரியான தலைமைச் செயலர், சுகாதாரத் துறை, செயலாளர் ஆகியோரின் பொறுப்பற்ற தன்மையால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே தலைமைச் செயலாளர் மீது துணைநிலை ஆளுநர் கூறியது போல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் ஏற்கனவே இருந்த 150 இடங்களுடன் ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் 100 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளன. இதில் தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படி, மத்திய அரசின் சுகாதாரத்துறை ஆணையின்படி 650 இடங்களில் சட்டப்படி 50 சதவீதமான இடங்களை அரசு பெற்று சுமார் 325 இடங்கள் அரசு இட ஒதுக்கீடாக அரசு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது 36.4 சதவீதம் இடங்களை பெற்று 239 இடங்கள் அரசு இட ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைக்க பெறாமல் தனியார் மருத்துவ கல்லூரிக்கு சாதகமான நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசின் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தங்களது கையில் வைத்திருக்கும் துணை நிலை ஆளுநர் அவர்கள் மருத்துவம் பயின்றவருமான அவர் 86 மாணவர்கள் பயன்பெறாத வகையில் மாணவர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகச் செயலாகும்.
தனியார் மருத்துவ கல்லூரியில் 50% அரசின் ஒதுக்கீட்டை பெறாதது ஏன் என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு துணை ஆளுநர் உரிய பதிலளிக்க வேண்டும்.
கடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் காலி பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை. தற்போது ஆட்சியில் அமைத்துள்ள எங்கள் கூட்டணி அரசில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிறப்பப்பட்டு வருகிறது நியமன விதியின் படி எல்.டி.சி, யூடிசி பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக காங்கிரஸ் கட்சியினர் பணி நியமன விதியை தடுத்துக் கொண்டு வருவதால் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகி வருகிறது. யூடிசி பணியில் பணி நியமன விதியில் 100 காலி பணியிடங்கள் என்றால் அதில் 20 பணியிடங்களை பணி மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என பணி நியமன ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது காலி பணியிடங்களும் அதே பணி நியமன ஆணையின் படி நிரப்ப வேண்டும் என கூறி வருகின்றனர். எனவே முதலமைச்சர் ரங்கசாமி பணி நியமன விதியில் மாற்றம் செய்யாமல் ஏற்கனவே உள்ள பணி நியமனம் விதியின்படி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். எதிர் கட்சிகளின் பாசப்ப வார்த்தைகளுக்கு செவி சாய்க்க கூடாது.
தற்போது பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு சென்று கூட்டணி பற்றி பேச சென்றிருப்பது தமிழகத்திற்கும் தலைகுனிவாகும். எங்களது அதிமுக முதலமைச்சராக மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியில் மற்ற மாநிலங்களை சார்ந்த முதலமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வந்தனர். ஆனால் தற்போது மக்கள் விரோத விடியா தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக பேசுவதற்கு வடமாநிலத்திற்கு சென்று வந்திருப்பது தவறான ஒன்று.
எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.
கோவில் நிலம் அபகரிப்பு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதில் சார்பதிவாளர் அவர்களையும் கைது செய்துள்ளனர்.. அப்பொழுது அவர் என்னுடைய மேலதிகாரி உத்தரவுபடி தான் நானும் அனுமதி கொடுத்ததாக கூறியுள்ளார். எனவே அந்த மேல் அதிகாரிகள் யார் அவர்களின் நடவடிக்கை எடுக்காது ஏன்? எனவே கோவில் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த பிரச்சனையை விசாரிக்கும் போதே பாஜக எம்எல்ஏ ஒருவர் தலையிட்டு கோவில் நிலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை அப்படி இருந்தால் நான் ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அப்படி என்றால் அந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் தான் அறிவித்தபடி அந்த ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முடியுமா? புதுச்சேரியில் திட்டமிட்டு சட்டமன்ற உறுப்பினர் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக