முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போர்க்கால அடிப்படையில் அரசு பள்ளி கட்டிங்களை மேம்படுத்த வேண்டும்.! இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்.!

இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு புதுச்சேரி நகர்புற அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியம். ஆனால் இன்றைக்கு ஆளக்கூடிய ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணி அரசாங்கம் நகர்ப்புற அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பெரும் தோல்வி அடைந்திருக்கிறது இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒன்றிய பிஜேபி அரசுக்கு ஆதரவான ஒரு அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் தாராளமாக நிதி கிடைக்கும் புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்றைக்கு புதுச்சேரி கல்வித்துறையில் ஒட்டுமொத்தமாக எந்த ஒரு நிதியும் ஒதுக்காமல் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் கல்வித் துறையை சீரழித்துள்ளது. குறிப்பாக நகர்புறத்தில் தொடர்ச்சியாக பழமை வாய்ந்த அரசு பள்ளி கட்டிடங்களை புணரமைக்காமல் இடியும் நிலை வரை காலம் கடத்தி பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவது இடப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை என தொடர்ந்து புதுச்சேரி அரசாங்கம் தோல்வியுற்று வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கோடை விடுமுறை முடிந்து நேற்றைய தினம் பள்ளிகள் துவங்கப்பட்டது ஆனால் பள்ளிகள் துவங்கப்பட்ட முதல் இரண்டு நாட்களும் நகர்ப்புறத்தில் பல இடத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இடப்பாற்றாக்குறை காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் தன் எழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கோடை விடுமுறை முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு பள்ளிகள் திறந்தபின் இரண்டு பள்ளிகளை ஒரே கட்டிடத்தில் நடத்துவது அரைநாள் சுழற்சி முறையில் நடத்துவது என்ற அரசின் தவறான முடிவால் இன்றைக்கு இரண்டு நாட்களாக வீரமாமுனிவர், திரு.வி.க மற்றும் சுப்ரமணிய பாரதியார் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்‌.

 இதையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நகர்ப்புற அரசு பள்ளி மாணவர்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு முறையான கல்வியை கிடைப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும் இல்லையேல் இதே நிலைமை தொடரும் பட்சத்தில் இந்திய மாணவர் சங்கம் அனைத்து பள்ளி மாணவர்களையும் ஒன்று திரட்டி சட்டமன்றத்தை முற்றுகையிடக்கூடிய ஒரு போராட்டத்தை மேற்கொள்ளும் என்பதை எச்சரிக்கையோடு இந்த நேரத்தில் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...