முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதுச்சேரி அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு எடுத்துக்கூறி, அதேபோல வாழ்ந்து காட்டியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். நீங்கள் களங்கம் ஏற்படுத்த நினைக்கும் *இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் போயஸ் கார்டன் வீட்டில் உங்கள் கட்சியை சேர்ந்த வட இந்திய தலைவர்கள் காத்துக்கிடந்த உண்மையான வரலாறு தெரியாமல்* தான்தோன்றித்தனமாக தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை மீறி அவர் செயல்படுகிறார். அதிமுகவுடன் கூட்டணி தொடரக்கூடாது என்ற எண்ணத்தோடு அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. *உண்மையில் தைரியமும், தெம்பும் இருந்தால் தமிழ்நாட்டை விடுங்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் மட்டுமாவது அதிமுகவின் துணை இன்றி பாரதீயஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு, டெபாசிட் வாங்க திராணி உள்ளதா?*

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆசியோடு அதிமுகவை ராணுவ கட்டுக்கோப்போடு அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய கழக நிரந்தர பொதுச்செயலாளர் அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் நடத்தி வருகிறார். அவர் உத்தரவிட்டால் தென் இந்தியாவில் பாரதீயஜனதா கட்சி அதிமுக தொண்டர்களால் ஓட, ஓட விரட்டியடிக்கப்படும். கழகம் எனும் தேன்கூட்டில் அண்ணாமலை கல்வீசி பார்க்க நினைக்கிறார். இதனால் ஏற்படும் விபரீதத்தை அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியாது.  

*நன்றி மறப்பது நன்றன்று,* தனது அநாகரீகமான பேச்சுக்கு தமிழ்நாடு பாரதீயஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி, உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கோடான கோடி அதிமுக தொண்டர்களின் உள்ளக்கொதிப்பை சந்திக்க நேரிடும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் எச்சரிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...