முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளைஞர்களுக்கு துரோகம் செய்யும் என்.ஆர்- பாஜக அரசு.! இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டு.!

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி அரசு பணிக்கான குரூப்-B நேரடி ஆட்சேர்ப்பில் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காதது வேதனை அளிக்கிறது.
அரசு வேலைக்கான வயது உச்ச வரம்பை தளர்வு பெற மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகியது தவறு. மாநில அமைச்சரவை பரிந்துரையின் பேரில் துணைநிலை ஆளுநர் அவர்கள் அனுமதி வழங்க முடியும். வயது வரம்பு தளர்வு பெற மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகியது மூலம் ஆளும் என் ஆர், பி ஜே பி அரசாங்கம் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதோடு இளைஞர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி அவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.


புதுச்சேரி அரசு பள்ளியில் டி ஜி டி அதாவது கிராஜுவேட் டீச்சர் அப்பாயிண்ட்மெண்ட் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இளைஞர்களுக்கு அரசு பணியிடங்களை வழங்குவதற்கு முயற்சி செய்தபோது மத்திய பிஜேபி அரசும் அப்போதைய கவர்னரும் தடையாக இருந்தனர். ஒரு இளைஞர் 2010ல் பி.எட் படித்திருந்தால் அவருக்கு வயது அப்போது 23 ஆகும் அவருக்கு இப்பொழுது 36 வயது ஆகும். 13 ஆண்டுகள் பிறகு அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு மற்றும் பிற அரசு வேலைக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது அதனால் இந்த இரண்டு ஆண்டு வயது வரம்பு தளர்வே குறைவானது. தேர்வில் அனைத்திலும் இளைஞர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் இளைஞர்களும் இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் கடந்த வாரம் வந்து அறிவிப்பு பல இளைஞர்களுக்கு பேரிடியாய் அமைந்துள்ளது. இளைஞர்கள் தேர்வில் பங்கேற்று அதில் வெற்றி பெற வில்லை என்றால் அது ஏற்புடையது. ஆனால் நீங்கள் அரசாங்க வேலைக்காக இரவும் பகலும் படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களை தேர்வில் வயது அடிப்படையில் பங்கேற்க விடாமல் தடுப்பது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் பதவி ஏற்ற உடனே அரசு காலி பணியிடங்களை நிரப்பி இருந்தால் இத்தகைய சூழ்நிலை ஓரளவு தவிர்க்கப்பட்டிருக்கும். பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்தும் அவர் வழங்கிய வேலைவாய்ப்பு மிகவும் சொற்பமே. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசாங்கம் அதாவது இரட்டை இன்ஜின் சர்க்கார் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய முடியும் என்று பிரச்சாரம் செய்தீர்கள் ஆனால் அது என்ன ஆனது. இப்பொழுது. இந்த இரட்டை இன்ஜின் சர்க்காரின் நிலைப்பட்டால் பல்வேறு இளைஞர்களின் கனவு கானல் நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க முடியவில்லை என்றால் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக தெரிகிறது மக்கள் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தை புறக்கணிக்கிறார்கள் என்று. இந்த அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இளைஞர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய முதல்வர் தவறினால் புதுச்சேரி உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி இளைஞர் காங்கிரஸ் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...