முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயில் இடம் ஆக்கிரமிப்பு.! சாமிநாதன் புகார்.!

புதுவை மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,

 புதுச்சேரி மாநிலம், இலாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டையில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 1,50,000 சதுரடி பரப்பளவு கொண்ட கொள்ளிமேடு மைதானம் கடந்த 50 ஆண்டுகளாக பலவிதமான பிரச்சனையுள்ள இடமாக இருந்து வருகிறது. இந்த கொள்ளிமேடு மைதானத்தை சமீபகாலமாக அரசியல் பிரமுகர்களின் துணையோடு மனைகளாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பெத்துச்செட்டிப்பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மேற்பார்வையிலும், பராமரிப்பிலும் இருந்து வருகிறது. இது குறித்து முன்னாள் ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆளுனர் நேரிடையாக வந்து பார்வையிட்டு மிகவிரைவில் அரசுடையாக்கப்பட்டு, பெத்துச்செட்டிப்பேட்டை, சாந்திநகர், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், செல்லபெருமாள்பேட்டை மற்றும் ஆனந்தா நகரில் வசித்து வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்காக பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இது சம்பந்தமாக பல அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பெத்துச்செட்டிப்பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் தற்போது தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த ஒரு முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, அரசாங்கமே நேரிடையாக தலையீட்டு 50 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்க வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மீறினால் பொதுமக்கள் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும், அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய நில விற்பனையாளர் மூலம், முதல்வருக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ள ஒரு காவல் அதிகாரி பெத்துச்செட்டிப்பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கொள்ளிமேடு மைதானத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மற்றும் உரிமை மாற்றம் செய்து மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல் உள்ளது. அப்படி அதிகாரிகள் தவறு செய்யும் பட்சத்தில், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான சொத்தை பாதுகாக்க நீதிமன்ற சென்றதுபோல, பொதுமக்கள் ஆதரவுடன் நீதிமன்றம் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி தரவும் தயங்கமாட்டேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...