முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வார்த்தை ஜால பட்ஜெட் ; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 
புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் - 4 அம்ச - பட்ஜெட் என அறிவித்து இவர்களுக்கு பிரயோஜனமில்லாத பட்ஜெட்டாக இருக்கிறது.

விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலை (MSP) அறிவித்ததால் விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என்ற புளுகு மூட்டையை அவிழ்த்து உள்ளார். தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசும்- விவசாயிகள் போராட்ட குழுவினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் என்பது அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதுதான் இது நிறைவேற்றப்படவில்லை.

கடந்த காலத்தில் பொய்யான வாக்குறுதி அளித்தது போன்றே..... இப்போது 5 ஆண்டுகளில் 4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற அறிவிப்பு- எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே எனும் பாடல் வரி தான் நினைவுக்கு வருகிறது.

ஏழைகள் வாழ்வு மேம்பாட்டிற்காக எந்த திட்டமும் இல்லை. 80 கோடி பேர் ஏழ்மையிலும், வறுமையிலும் இருக்கிறார்கள் என்று நிர்மலா சீதாராமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. 

    SC, ST, விஸ்வகர்மா மேம்பாட்டு சமூக நீதி திட்டம் .... என்பது மனுதர்ம கருத்தியலால் மனித ஏற்றத்தாழ்வுகளை உறுதி செய்வதாகும்.

தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலால் கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்த பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்கள்.

ஆனால்.... பிஜேபி ஆட்சி இல்லாத மாநிலங்கள் ஓரவஞ்சனை செய்யப்பட்டுள்ளன. கூட்டாட்சி முறைக்கு எதிரான தாக்குதல் மீண்டும் ஒருமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது.‌ 

குறிப்பாக யூனியன் பிரதேசமான புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர்களுக்கு விடுதி வேண்டாம்- வீடுகள்தான் வேண்டும்.மின்சாரம்- கட்டமைப்பு துறைகளில் தனியார் ஊக்குவிக்கப்படுகிறது.சுற்றுலா மேம்பாடு எனும் பெயரில் மதவாத அரசியலை வளர்ப்பதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. 15 தொழில் பூங்கா அறிவிக்கப்படுகிறது. ஆனால்... ஜவுளி பூங்காவை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. 

     கடந்த காலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி குறைக்கப்பட்டது, தற்போது இன்னும் எளிமைப்படுத்தப்படும் என்று கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது.

     பொதுவாக ஏழைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று வார்த்தைகள் இருக்கிறதேயன்றி - இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான உருப்படியான எந்த திட்டமும்- நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இல்லை.

     குறிப்பாக புதுச்சேரி மாநிலம் மீண்டும் ஒருமொருமுறை வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...